search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ ஆய்வகம்"

    • மினால் பட்டேல் ஜார்ஜியா மாநிலத்தில் லேப் சொல்யூஷன்ஸ் பெயரில் மருத்துவ ஆய்வகம் நடத்தி வந்தார்
    • இதை தவிர, தனிப்பட்ட முறையில் ரூ.175 கோடி மோசடியாக பெற்று கொண்டார்

    உலகின் முன்னணி நாடான அமெரிக்காவில் மருத்துவ செலவுகள் மிக அதிகம் என்பதால், அங்குள்ள மக்கள் காப்பீடு மூலம்தான் தங்களுக்கு தேவைப்படும் மருத்துவ செலவினங்களை செய்து கொள்ள முடியும்.

    இதற்கு பல காப்பீடு நிறுவனங்கள் இருந்தாலும், மெடிகேர் எனும் அமெரிக்க அரசாங்கத்தால் நடத்தப்படும் காப்பீடுகளைத்தான் பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகிறார்கள். இதன்படி பயனாளிகளுக்கு தேவைப்படும் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட ஆய்வக பரிசோதனகள், ஸ்கேன் உள்ளிட்ட இமேஜிங் பரிசோதனைகள் மற்றும் உயர்-ரக தொழில்நுட்ப உடற்கூறு பரிசோதனைகளுக்கான தொகை, மெடிகேர் நிறுவனத்தின் மூலம் சம்பந்தப்பட்ட ஆய்வக மற்றும் பரிசோதனை கூடங்களுக்கு செலுத்தப்பட்டு விடும்.

    இது சம்பந்தமான ஊழல் ஒன்று அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

    அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ளது லேப் சொல்யூஷன்ஸ், எல்.எல்.சி. எனும் மருத்துவ ஆய்வகம். இதை மினால் பட்டேல் (44) எனும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நடத்தி வருகிறார். இவர் பெரும் பணம் சம்பாதிக்க ஒரு திட்டம் தீட்டி மெடிகேர் பயனாளிகளை குறி வைத்தார்.

    பயனாளிகளுடன் தொடர்பில் உள்ள சில முகவர்கள், கால் சென்டர்கள் மற்றும் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் அகியவற்றை தொடர்பு கொண்டார். இவர்களுக்கு பணம் கொடுத்து அவர்கள் மூலம், பயனாளிகளுக்கு அவசியம் இல்லாத சில புற்றுநோய் சம்பந்தமான அதிநுட்ப மரபியல் சோதனைகளை பயனாளிகள் செய்து கொண்டே ஆக வேண்டும் என நம்ப செய்தார்.

    இந்த பரிசோதனைகள் காப்பீட்டுக்கு உட்பட்டது என கூறி அவர்களை பரிசோதனைகளை செய்து கொள்ள வைத்தார். இதற்காக அவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ ஒப்புதல்களையும் மோசடி செய்து பெற்றார். தேவையற்ற இந்த பரிசோதனைகளுக்கான செலவுகளுக்கு ரசீதுகளை மெடிகேரில் செலுத்தி பணத்தையும் பெற்றுக் கொண்டார்.

    இந்த வழிமுறையில் மினால் பட்டேல் ஜூலை 2016 முதல் ஆகஸ்ட் 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் ரூ.3 ஆயிரத்து 850 கோடிக்கு ($463 million) மேல் மோசடி செய்தார்.

    மத்திய புலனாய்வு அமைப்பின் சுகாதார ஊழல் தடுப்பு படைக்கு இது குறித்து தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆபரேஷன் டபுள் ஹெலிக்ஸ் எனும் பெயரில் மினாலை பிடிக்க ஒரு ரகசிய திட்டம் போட்டது. இதில் அவர் பொறி வைத்து பிடிக்கப்பட்டார்.

    இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்தது. இறுதியில் நீதிமன்றம் அவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி இருக்கிறது.

    ஆகஸ்ட் 25 அன்று அவரது சொத்துக்களை முடக்குவது தொடர்பான விசாரணை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×