search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவியை தாக்கியவர் கைது"

    ஆண்டிப்பட்டி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள மயிலாடும்பாறை கோரையூத்து பகுதியை சேர்ந்தவர் சேனாதிபதி (வயது30). இவருக்கும் முத்துப்பிரியா (20) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    மனைவியின் நடத்தையில் சேனாதிபதிக்கு சந்தேகம் இருந்தது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று இரவு இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் மனைவியை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சேனாதிபதியை கைது செய்தனர்.

    இதேபோல் கடமலைக்குண்டு அருகில் உள்ள கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் வனராஜ் (34). இவருக்கும் ஜெயலட்சுமி (28) என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 மகள்கள் உள்ளனர். குடிபழகத்திற்கு அடிமையான வனராஜ் தினமும் போதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று இரவு கம்பால் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். 

    இது குறித்து கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வனராஜை கைது செய்தனர்.

    ×