search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய மந்திரிசபை கூட்டம்"

    • பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.
    • இதில் நாடு முழுவதும் 10,000 புதிய மின்சார பஸ்கள் அறிமுகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள், முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மந்திரிசபை கூட்டத்திற்கு பின் மத்திய மந்திரி அனுராக் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதம மந்திரியின் மின்சார பஸ் சேவை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு 57, 613 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.

    இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 10,000 புதிய மின்சார பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அரசு மற்றும் தனியார் கூட்டாக இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

    57,613 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்தில் 20,000 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்கும். இந்தத் திட்டம் 3 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

    ×