search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சுவாரியார்"

    • காரை ஓட்டிக் கொண்டு வந்தவர் பிரபல நடிகை மஞ்சு வாரியர் என்பது தெரிய வந்தது.
    • ஒருபக்கம் சோதனை நடந்த நிலையில், மறுபக்கம் மஞ்சு வாரியரிடம் ரசிகர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்தனர்.

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெறவுள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்ண்டு கொண்டு வருகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன.

    திருச்சி மாநகர், புறநகர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை திருச்சி-அரியலூர் தேசிய நெடுஞ்சாலை, திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நகர் பகுதியில், தேர்தல் பறக்கும்படை அலுவலர் ரஞ்சித்குமார் தலைமையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா அடங்கிய குழுவினர் சோதனை மேற கொண்டனர்.

    அப்போது, கேரள மாநில பதிவெண் கொண்ட, கருப்பு நிற சொகுசு கார் வந்தது. பறக்கும்படையினர் அதை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்த காரை ஓட்டிக் கொண்டு வந்தவர் பிரபல நடிகை மஞ்சு வாரியர் என்பது தெரிய வந்தது.

    இதனால் தேர்தல் அதிகாரிகள் மஞ்சு வாரியரிடம் விவரங்களை கேட்டுக் கொண்டே சோதனை செய்தனர். இதனிடையே நடிகை மஞ்சு வாரியர் காரில் இருக்கும் தகவல் அப்பகுதியில் தீயாய் பரவியது. பின்னால் நின்று கொண்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மஞ்சு வாரியாருடன் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். ஒருபக்கம் சோதனை நடந்த நிலையில், மறுபக்கம் மஞ்சு வாரியரிடம் ரசிகர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்தனர்.

    கூட்டம் அதிகமாக கூடுவதை தவிர்க்க, மஞ்சு வாரியரின் காரை விரைவாக சோதனை செய்து, அவரை வேகமாக தேர்தல் பறக்கும் படையினர் அனுப்பி வைத்தனர். முழுமையான சோதனை முடிந்த பின்னர் நடிகை மஞ்சு வாரியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சோதனையில் பணம், பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என பறக்கும் படையினர் தெரிவித்தனர்.

    ×