search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகன்கள் கைது"

    • ரூபாவை சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
    • லோகநாதன் மற்றும் அவரது மகன்களை கைது செய்தனர்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகேயுள்ள தீர்த்தமலை பகுதியை சேர்ந்தவர் ரவிகுமார். விவசாயி. இவரது மனைவி ரூபா (வயது 38).

    இவர்களது உறவினர் லோகநாதன். இருவருக்கும் இடையே நில தகராறு உள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக லோகநாதன், அவரது மகன்கள் விக்னேஷ், வெங்கடேஷ் ஆகியோர் ரவிகுமாரின் வீடு புகுந்து ரூபாவை சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

    அதனை தடுக்க முயன்ற ரவிக்குமாரையும் தாக்கியுள்ளனர். இது குறித்து ரவிக்குமார் தந்த புகாரின்பேரில் கோட்டப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து லோகநாதன் மற்றும் அவரது மகன்களை கைது செய்தனர்.

    காயம் அடைந்த ரூபா அரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ரவிக்குமாரும், ரூபா வும் தங்களை தாக்கியதாக விக்னேஷ் ஒரு புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×