search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் பணியிடை நீக்கம்"

    • தமிழ்நாடு போலீஸ் துறையில் முதன் முறையாக பணியிடங்கள் காலியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
    • அதிகாரிகளை பொறுத்த வரையில் ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினோம்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் போலீஸ் நிலைய புதிய கட்டிடங்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார். பின்னர் அவர் நாகர்கோவில் ஆயுதப்படை முகாமில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் போதை பொருள் இல்லை என்ற நிலை 282 போலீஸ் நிலையங்களில் ஏற்பட்டுள்ளது. போதை பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த போலீஸ் துறையை சேர்ந்த 18 போலீசார், அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் போதை பொருள் நடமாட்டம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

    குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் திருட்டு போய் மீட்கப்பட்ட 1½ கிலோ தங்கம், 300 செல்போன்கள், 50 இருசக்கர வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு போலீஸ் துறையில் முதன் முறையாக பணியிடங்கள் காலியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 1 லட்சத்து 34 ஆயிரம் காவலர்கள், 15 ஆயிரம் ஊர்காவல் படை வீரர்கள் உள்ளனர். தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 10 ஆயிரம் காவலர்கள் நியமிக்கப்பட்டார்கள். தற்போது 3,700 காவலர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இதைப் போன்று அதிகாரிகளை பொறுத்த வரையில் ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினோம்.

    அதன்பிறகு 444 உதவி ஆய்வாளர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர். பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட காவலன் செயலி பெண்கள் மத்தியில் சரியாக போய் சேரவில்லை. இதனால் அதுதொடர்பாக தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோர்ட்டு வளாகத்தில் இருந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இருவரையும் சுட்டனர்.
    • துப்பாக்கி சூட்டில் மிதிலேஷ் கிரி, சூர்யபிரகாஷ் ராய் இருவரும் காயமடைந்தனர்

    ஜான்பூர்:

    உத்தரபிரதேசத்தின் ஜான்பூரை சேர்ந்த மிதிலேஷ் கிரி, சூர்யபிரகாஷ் ராய் ஆகிய இருவரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் ஜான்பூரில் உள்ள தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

    அப்போது கோர்ட்டு வளாகத்தில் இருந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இருவரையும் சுட்டனர். இதில் மிதிலேஷ் கிரி, சூர்யபிரகாஷ் ராய் இருவரும் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்களில் ஒருவரை கோர்ட்டு வளாகத்தில் நின்றிருந்த வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.

    இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத்தொடர்ந்து கோர்ட்டு வளாகத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீஸ்காரர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் உத்தரவிட்டுள்ளார்.

    ×