search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் தேடுதல் வேட்டை"

    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நேரில் விசாரணை நடத்தினர்.
    • 2 மர்ம நபர்கள் நள்ளிரவில் கடையில் முன்பக்கம் உள்ள ஷட்டர் பூட்டை உடைத்து கதவை திறந்து நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

    பாப்பாரப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பழைய சுப்பிரமணியசுவாமி கோவில் தெருவை சேர்ந்த வர் சீனிவாசன். இவரது மனைவி மைதிலி (வயது36).

    இவர் பாப்பாரப்பட்டி கடைவீதியில் நகைக்கடை வைத்துள்ளார். இதில் வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க சென்ற போது கதவின் முன்பக்க ஷட்டர் பூட்டு உடைக்கப்ப ட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வெள்ளி நகைகள் மற்றும் டம்ளர்கள் உள்ளிட்ட 10 கிலோ எடையுள்ள சுமார் 2 லட்சம் ரூபாய் வெள்ளி நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.

    இதுகுறித்து மைதிலி பாப்பாரப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நேரில் விசாரணை நடத்தினர்.

    மேலும் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தபோது 2 மர்ம நபர்கள் நள்ளிரவில் கடையில் முன்பக்கம் உள்ள ஷட்டர் பூட்டை உடைத்து கதவை திறந்து நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரிக் வண்டி தொழிலாளி. இவர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார்.
    • நவீனா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்து விட்டு தப்பி ஓடினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் போதுப்பட்டி லட்சுமி நகரில் வசித்து வருபவர் சதீஷ்குமார். ரிக் வண்டி தொழிலாளி. இவர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நவீனா (வயது 26), குழந்தைகளுடன் நாமக்கல்லில் வசித்து வருகிறார்.

    கடந்த 13-ந் தேதி இரவு வீட்டில் நவீனா குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி அணிந்த 2 பேர், நவீனா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்து விட்டு தப்பி ஓடினர். அதே நாளில் அங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சரவணா நகரை சேர்ந்த முட்டை வியாபாரி அருண்குமார் என்பவருடைய மனைவி லட்சுமியிடம் வீட்டின் கதவை உடைத்து 2.5 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

    இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை கொள்ளையர்கள் சிக்கவில்லை. தொடர்ந்து தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில், நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள சாய் பிருந்தாவன் நகரில் 2 வீடுகளுக்குள் நேற்று முன்தினம் அதிகாலை முகமூடி கொள்ளையர்கள் 4 பேர் கையில் இரும்பு ராடுடன் நுழைந்தனர். ஆனால் அந்த வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. வீட்டுக்குள் இரும்பு ராடுடன் முகமூடி‌ அணிந்தபடி அவர்கள் சுற்றி வரும் காட்சி, அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.

    6 தனிப்படை

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. இதனால் அப்பகுதி பொது மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதையடுத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் 6 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை பிடிக்க உத்தரவிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தொடர்ந்து தேடி வருகி றார்கள். விரைவில் கொள்ளையர்கள் சிக்கு வார்கள் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    நாமக்கல் நகரில் முகமூடி கொள்ளையர்களின் அட்ட

    காசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அச்ச

    மடைந்துள்ளனர். கொள்ளையர்களை உடனே பிடிக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×