என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலி வாக்காளர்கள்"
- போலி வாக்காளர்களை கண்டுபிடிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.
- 16 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 2.6 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 38.83 லட்சம் பேர்.
கடந்த ஆண்டு 3.2 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் 2 லட்சம் பேர் வரை நீக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து போலி வாக்காளர்களை அடையாளம் காண புதிய மென்பொருளை தேர்தல் ஆணையம் உருவாக்கியது.
அதை பயன்படுத்தி போலி வாக்காளர்களை கண்டுபிடிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. 16 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 2.6 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் மிகவும் அதிகமாக போலி வாக்காளர்கள் இருப்பது வேளச்சேரி மற்றும் விருகம்பாக்கம் தொகுதிகள்தான்.
வேளச்சேரி தொகுதியில் மொத்தம் 3.05 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 24 ஆயிரத்து 414 போலி வாக்காளர்கள் உள்ளனர்.
இதற்கு அடுத்ததாக விருகம்பாக்கம் தொகுதி. இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 2.76 லட்சம் வாக்காளர்களில் 23,073 பேர் போலி வாக்காளர்கள்.
சைதாப்பேட்டை தொகுதியில் மொத்தம் 2.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 19,883 பேர் போலி வாக்காளர்கள்.
2.72 லட்சம் வாக்காளர்களை கொண்ட அண்ணாநகர் தொகுதியில் 19,506 போலி வாக்காளர்கள் உள்ளனர். துறைமுகம் தொகுதியில்தான் குறைந்த எண்ணிக்கையில் அதாவது 10,082 போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
இந்த போலி வாக்காளர்களை போட்டோ அடையாளத்தை அடிப்படையாக கொண்டு கம்ப்யூட்டர் கண்டுபிடித்துள்ளது. வாக்குச்சாவடி அளவிலான ஊழியர்கள் மூலம் வீடு வீடாக ஆய்வு நடத்தி தவறாக சேர்க்கப்பட்டிருப்பவர்கள் நீக்கப்படுகிறார்கள்.
மேலும் ஒரு புதிய மென்பொருளை மக்கள்தொகை பண்புகளின் அடிப்படையில் கண்டுபிடிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் உருவாக்கி உள்ளது. விரைவில் போலி வாக்காளர்களை முற்றிலுமாக நீக்கும் வகையில் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்