search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போர் நினைவு சின்னம் திறப்பு"

    உலகப் போர் நூற்றாண்டு நினைவுநாள் அஞ்சலி கூட்டத்துக்கு சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். #Trumpmotorcade #Parisprotesters
    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிசில் உள்ள ‘ஆர்க் டி டிரியோம்பே’ போர் நினைவு சின்னத்தில் சுமார் உலகில் உள்ள சுமார் 70 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நினைவு சின்னத்துக்கு பலத்த பாதுகாப்புடன்  காரில் வந்து கொண்டிருந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னுமாக பாதுகாப்பு வீரர்கள் கார்களில் வந்தனர்.

    அப்போது, சாலையோர தடுப்பை தாண்டி குதித்த இரு பெண்கள் டிரம்ப் கார் அணிவகுப்பின் குறுக்கே மேலாடை இல்லாமல்  பாய்ந்தனர். அதற்குள் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அந்தப் பெண்களை டிரம்ப்பின் கார் கடந்து சென்று விட்டது. அவரது காருக்கு பின்னால் வந்த கார்களின் அருகே நின்று அவர்கள் டிரம்ப்பை எதிர்த்து கோஷமிட்டனர். 

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாரிஸ் நகர போலீசார் பாய்ந்தோடி சென்று அந்தப் பெண்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். 

    கைதான பெண்கள் டிரம்ப்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இணையதளம் மூலம் நடைபெற்ற ‘ஃபெமென்’ இயக்கத்தின் ஆதரவாளர் என தெரியவந்துள்ளது.

    முன்னதாக, இன்று காலை இதே இயக்கத்தை சேர்ந்த 3 பெண்கள்  ‘ஆர்க் டி டிரியோம்பே’ போர் நினைவு சின்னத்தின் அருகே மேலாடை இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். #Trumpmotorcade  #Parisprotesters 
    நான்காண்டுகளில் 2 கோடி உயிர்களை பறித்த முதல் உலகப் போர் முடிந்த நூற்றாண்டு நினைவுநாளான இன்று சுமார் 70 நாடுகளின் தலைவர்கள் பாரிஸ் நகரில் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர். #Worldleadersmark #WWIcentenary #Parisceremony
    பாரிஸ்: 

    முதல் உலகப் போர் முடிவுக்கு வந்த நூற்றாண்டு நினைவு நாளான இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிர்நீத்த தங்கள் நாட்டு வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிசில் உள்ள ‘ஆர்க் டி டிரியோம்பே’ போர் நினைவு சின்னத்தில் சுமார் உலகில் உள்ள சுமார் 70 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

    கொட்டும் மழையில் குடை பிடித்தவாறு மவுன ஊர்வலமாக தலைவர்கள் நடந்துவந்து போர்  நினைவு சின்னத்தின் அருகே திரண்டனர். 

    பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மாக்ரான் தலைமையில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய பிரதமர் விளாடிமிர் புதின், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், கனடா பிரதமர் ஜஸ்ட்டின் டுருடேயு உள்ளிட்ட தலைவர்கள் ஊர்வலமாக அணிவகுத்து வந்தனர்.

    பாதுகாப்பு காரணமாக டிரம்ப், புதின் ஆகியோர் நடந்து வராமல் கார் மூலம் நினைவு சின்னத்தை வந்தடைந்தனர். நினைவு சின்னத்தில் டிரம்ப்பும் புதினும் கைகுலுக்கி கொண்டனர்.

    சரியாக காலை 11 மணி அடித்ததும் முதல் உலகப் போரில் தங்களது இன்னுயிரை நீத்த கோடிக்கணக்கான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தலைவர்கள் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர். முன்னாள் ராணுவ வீரர்கள் உள்பட பல்லாயிரம் பேரும் இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    பின்னர், பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மாக்ரான் உருக்கமாக உரையாற்றினார்.

    உலகில் பல நாடுகள் இன்று தேசியவாதம் என்ற மனப்போக்கை கடைபிடித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். தேசப்பற்று அல்லது தேசபக்தி என்பது வேறு. தேசியவாதம் என்பது வேறு. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

    அமைதிக்கான நமது நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் வரலாறு நம்மை சில வேளைகளில் அச்சுறுத்தி வருகின்றது. தற்போது பழைய தீமைகள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. 

    முதல் உலகப் போர் விட்டுச்சென்ற தடங்கள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் இருந்து இன்னும் அழிந்தபாடாக இல்லை. 

    பருவநிலை மாற்றம், வறுமை, பஞ்சம் மற்றும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக போரிடுவதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும். அனைத்துக்கும் மேலாக அமைதிக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் மாக்ரான் வலியுறுத்தினார். #Worldleadersmark #WWIcentenary #Parisceremony
    பிரான்ஸ் நாட்டில் இந்தியா சார்பில் முதல் முதலாக அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னத்தை இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று திறந்து வைத்தார். #France #WarMemorial #VenkaiahNaidu
    பாரிஸ்:

    பிரான்ஸ் தலைநகரில் பாரிஸ் அமைதி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பிரான்ஸ் சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி உஷாவும் சென்றுள்ளார்.

    முதலாம் உலகப் போர் முடிந்து நூறு வருடம் நிறைவடைந்ததை நினைவு கூரவும், சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மெக்ரான் தலைமை தாங்குகிறார். இதில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.



    இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் விலர்ஸ் குய்ஸ்லேனில் இந்தியா சார்பில் அமைக்கப்பட்ட போர் நினைவுச் சின்னத்தை துணை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், விலர்ஸ் குய்ஸ்லேனில் இந்தியா சார்பில் கட்டப்பட்டுள்ள போர் நினைவுச் சின்னத்தை திறந்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். முதலாம் உலக போரில் உயிர் நீத்த பல்லாயிரக்கணக்கான இந்திய படைவீரர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும் என தெரிவித்தார்.
     
    முன்னதாக, பிரான்ஸ்வாழ் இந்திய மக்களை சந்தித்து வெங்கையா நாயுடு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    #France #WarMemorial #VenkaiahNaidu
    ×