search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்தும் பாதிப்பு"

    பொள்ளாச்சியில் நகராட்சி குப்பை லாரி ஏ பி டி சாலை பகுதியில் பள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் அந்த வழியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி நகராட்சி யில் பாதாள சாக்கடை பணிகள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ஒரு பகுதியில் பணிகளை முழுமையாக முடிக்காமல் அனைத்து பகுதிகளிலும் குழிகளை தோண்டி விட்டு சரியாக மூடாமல் செல்வதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பலர் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் விழுந்து காயமடையும் நிலை இருந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவர் இரு சக்கர வாகனத்துடன் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து காயமடைந்தார்.

    சமீபத்தில் ஒருவர் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து வரும் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். இருந்த போதும் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடாமல் அலட்சியமாக இருந்து வந்தனர்.

    காலை நகராட்சியின் குப்பை வண்டி ஏபிடி ரோடு பகுதியில் பாதாள சாக்கடைக் காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடாமல் இருந்த நிலையில் அதில் சிக்கிக் கொண்டது. ஓட்டுநர் பல முறை முயற்சித்தும் குப்பை லாரியை பள்ளத்தில் இருந்து மீட்க முடியவில்லை. இதனால் பொக்லைன் எந்திரம் கொண்டு வந்து குப்பை லாரியை மீட்க நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    நகராட்சி குப்பை லாரி ஏ பி டி சாலை பகுதியில் பள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் அந்த வழியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    ×