search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் பொருட்கள்"

    • தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
    • மண்பானையில் பஞ்சவர்ண நிறம் பூசி அழகூட்டியும் விற்பனை செய்து வருகின்றனர்.

    சேலம்:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. நாகரிக மாற்றத்துக்கு ஏற்ப பல்வேறு வசதிகள் வந்தாலும், தமிழர் பாரம்பரிய முறையில் விறகு அடுப்பில் பனை ஓலைகளால் தீ மூட்டி மண்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைத்து வழிபடுவதையே அனைவரும் விரும்புகின்றனர்.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் விறகு அடுப்பு, அடுப்புக்கட்டி, மண்பானைகள், கரும்பு, பனை ஓலைகள், பனங்கிழங்கு போன்றவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மண்பானையில் பஞ்சவர்ண நிறம் பூசி அழகூட்டியும் விற்பனை செய்து வருகின்றனர்.

    சேலம் காந்தி ரோடு பகுதியில் இதற்காக நூற்றுக்கணக்கான பானைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. சிறியது முதல் பெரிய வகையான பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புது பானைகளில் வண்ண வண்ண வகையான கோலமிட்டு அவை விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் மகிழ்ச்சி பொங்க வாங்கிச் செல்கின்றனர்.

    சேலம் மாவட்டத்தில் வண்ணக் கோலத்திற்கு தேவையான வண்ணச் சாயப் பொடி விற்பனைக்கு வந்துள்ளது. கோலப் பிரியர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு கோலப்பொடியை வாங்கிச் செல்வது விற்பனை யாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பொங்கல் பானை விற்பனை குறித்து மண்பாண்ட தொழிலா ளர்கள் கூறுகையில், ''15 நாட்களுக்கு முன்பாகவே பலரும் பஞ்சவர்ண பானை கேட்டு ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். மண்பானைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த அனைவரும் மீண்டும் அதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர் என்றனர்.

    இதேபோல் கரும்பு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட மஞ்சள் குலைகள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளன. இதேபோல் வகை வகையான வண்ணங்களில் கோலப்பொடிகளும், வெல்லம் மற்றும் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது.

    சேலம், நாமக்கல் மாவட்டம் முழுவதுமே, பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டி உள்ளது.

    ×