search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைனான்சியர் தற்கொலை"

    • பங்கு பணத்தை கேட்டு கத்தியால் மிரட்டினர்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு டவுன் கொடநகர் அறிஞர் அண்ணா பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு என்கிற மணி (வயது 26) மாங்கால் கூட்ரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

    அதில் செய்யாறு அருகே உள்ள பெருங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன் மகன் அன்பு(24) பங்குதாரராக இருந்தார். அந்த நிறுவனத்தில் இருந்து அன்பு விலகிக் கொண்டதால் அவரது பங்குத் தொகையை கேட்டுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி நிதி நிறுவனத்திற்கு சென்ற அன்பு அவரது நண்பர்கள் திருநாவுக்கரிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து ரூ.10 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு நிதி நிறுவனத்தை பூட்டி சென்று விட்டனர்.

    மேலும் திருநாவுக்கரசியிடம் பணத்தை கொடுத்து விட்டு நிதி நிறுவனத்தின் சாவியை வாங்கிக்கொள் என்று கூறி மிரட்டியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் திருநாவுக்கரசு வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையில் திருநாவுக்கரசின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் செய்யாறு அண்ணா சிலை அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பைனான்சியர் தற்கொலைக்கு காரணமான அன்பு ஆதவன்( 21 )நரேஷ் குமார் மற்றும் டில்லி (19) ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் செய்யாறில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×