search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேர் பலி"

    • மின்னல் தாக்கி 2 பேர் பலியானர்
    • ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் மின்னல் பாய்ந்து பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    கீழப்பழுவூர் அருகேயுள்ள வாரணவாசி, மல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசன்(வயது40). இவருக்கு சரோஜா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.இந்நிலையில், இவர் வயலில் வேலை செய்துக் கொண்டிருந்தபோது, இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அன்பரசன் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கீழப்பழுவூர் காவல் துறையினர், உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    இதே போல், செந்துறை அடுத்த தளவாய் கிராமத்தில் பெய்த மழையில், அப்பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மாலைமணி என்பவர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஈச்சங்காடு கிராமத்தில் மின்னல் தாக்கியதில் பலத்தகாயமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் பெண்ணடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த இருச்சம்பவங்கள் குறித்து தளவாய் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    ×