search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேக்கரி உரிமையாளர்"

    • 16 பவுன் நகை ரூ.10 லட்சம் அபேஸ்
    • மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் (வயது 40). இவருடைய மனைவி மேனகா கேசவன் ஓசூர் அருகே உள்ள தலிப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் புரட்டாசி மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை பண்டிகை கொண்டாட சொந்த ஊரான ரைஸ்மில் வட்டத்தில் உள்ள வீட்டை சுத்தம் செய்ய ஊருக்கு வந்தார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 16 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்தது. மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    இது சம்பந்தமாக கேசவன் நேற்று நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×