search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியநாயகி அம்மன் கோவில்"

    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி லட்சார்ச்சனை விழா வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி லட்சார்ச்சனை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடி லட்சார்ச்சனை விழா வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை பெரியநாயகி அம்மன் கோவிலில் பெரியநாயகி அம்மன் சன்னதியில் மாலை 5.30 மணிக்கு மேல் ஆடி லட்சார்ச்சனை தொடங்குகிறது.

    அதே போல் தினசரி 4 ஆயிரம் அர்ச்சனைகள் வீதம் 25 நாட்கள் பெரியநாயகி அம்மனுக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி லட்சார்ச்சனை விழா நிறைவடைகிறது. அடுத்த நாள் பெரியநாயகி அம்மன் கோவிலில் புரஸ்சரண ஹோமமும், மகாஅபிஷேகமும் நடைபெறும்.

    ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெரியநாயகி அம்மனுக்கு சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். அதன்படி வருகிற 20-ந்தேதி பெரியநாயகி அம்மனுக்கு முத்தங்கி அலங்காரமும், 27-ந்தேதி மீனாட்சி அம்மன் அலங்காரமும், அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி சந்தனக்காப்பு அலங்காரமும், 10-ந்தேதி பெரியநாயகி அம்மனுக்கு மகா அபிஷேகமும், தங்கக்கவச அலங்காரமும் நடைபெறுகிறது.

    அன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் திருவுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆடி லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் உலக நலன்வேண்டி அன்னாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேக விழா பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று நடந்தது. விழாவையொட்டி முத்துக்குமாரசாமி மண்டபத்தில் 3 வெள்ளி கலசங்கள் வைத்து விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், யாகம் நடைபெற்றது.

    இதையடுத்து நடந்த சாயரட்சை பூஜையில் சிவன், சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன், முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை ஆகியோருக்கு கலச அபிஷேகம் மற்றும் 16 வகை அபிஷேகமும், அன்னத்தால் கிரீடம் வைத்து சிறப்பு அலங்காரமும், அதைத்தொடர்ந்து அன்னாபிஷேகமும் நடைபெற்றது.

    அதன் பின்னர் மகா தீபாராதனையும் நடந்தது. இந்த நிகழ்ச்சியின் உபயதாரர்களான கண்பத் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர்கள் ஹரிகரமுத்து, செந்தில் ஆகியோருக்கு பரிவட்டமும், கோவில் பிரசாதமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
    ×