search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூமி தினம்"

    • உலக பூமி தினம் கொண்டாடப்பட்டது.
    • சுகாதார ஆய்வாளர் பாண்டிச்செல்வம் நன்றி கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி சார்பில் உலக பூமி தினத்தை முன்னிட்டு "என் குப்பை என் நீர்நிலை கூட்டு பொறுப்பு" உறுதிமொழி எடுத்தல், துப்புரவு பணி மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சிகள் நடந்தன.

    செட்டிகுளத்தில் நகராட்சி தலைவர்-முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டு மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டது. துணைத்தலைவர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார்.

    கவுன்சிலர் லதாமணிகண்டன் மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர். தூய்மைப்பணி மேற்பார்வையாளர் கார்த்திக், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி மற்றும் பரப்புரையாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    சுகாதார ஆய்வாளர் பாண்டிச்செல்வம் நன்றி கூறினார்.

    ×