என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பூக்கள் வரத்து அதிகரிப்பு"
- தற்போது ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை அடுத்தடுத்து வருவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
- இதனால் இன்று பல்வேறு ஊர்களில் இருந்து பூக்கள் அதிகளவில் கொண்டு வரப்பட்டது. இதனால் பல நாட்களுக்கு பிறகு பூக்களின் விற்பனை களைகட்டியது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நிலக்கோட்டை, செம்பட்டி, வெள்ளோடு, மைலாப்பூர், ரெட்டியார்சத்திரம், வடமதுரை, அய்யலூர், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விவசாயிகளால் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
இங்கிருந்து வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரை யாகவும் பூக்களை வாங்கி செல்கின்றனர். மேலும் வெளியூர்களுக்கும் பூக்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக புரட்டாசி என்பதால் திருமணம் உள்ளிட்ட எந்தவித விேஷச நிகழ்ச்சிகளும் நிடைபெற வில்லை.
இதனால் பூக்கள் வியாபாரம் மந்தமாக இருந்ததுடன் விலையும் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் இருந்தனர். தற்போது ஐப்பசி மாத முகூர்த்த நாளை முன்னிட்டு பூக்களின் விலை உயர தொடங்கியது. தற்போது ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை அடுத்தடுத்து வருவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதனால் இன்று பல்வேறு ஊர்களில் இருந்து பூக்கள் அதிகளவில் கொண்டு வரப்பட்டது. இதனால் பல நாட்களுக்கு பிறகு பூக்களின் விற்பனை களைகட்டியது. இன்று 50 டன் வரை பூக்கள் வந்துள்ள தாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மல்லிகை பூ கிலோ ரூ.1200-க்கு விற்பனையானது. முல்லை ரூ.600, காக்கரட்டான் ரூ.600, ஜாதிப்பூ ரூ.400, அரளி ரூ.600, சம்பங்கி ரூ.340, செவ்வந்தி ரூ.220, ரோஜா ரூ.200, செண்டுமல்லி ரூ.70, கோழிக்கொண்டை ரூ.50 என விற்பனையானது.
பூக்களின் விலை அதிகரி த்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல பூஜைக்கு பயன்படுத்தப்படும் பழங்கள், வாழைஇலை உள்ளிட்ட பொருட்களும் விலை அதிகரித்தது. பண்டிகைக்கு 2 நாட்கள் முன்னதாகவே பூஜைக்குரிய பொருட்களின் விற்பனை அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- இன்று விநாயகர் சதுர்த்தி உற்சாக மாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நிலக்கோ ட்டை பூமார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்தது.
- ஆனால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பூமார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு இங்கிருந்துதான் பூக்கள் அனுப்பி வைக்கப்படும். கடந்த 2 நாட்களாக ஆவணிமாத கடைசி முகூர்த்த நாளை முன்னிட்டு பூக்கள் வரத்து அதிகரித்தது. இதனால் விலையும் கூடுதலாக கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் இன்று விநாயகர் சதுர்த்தி உற்சாக மாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நிலக்கோ ட்டை பூமார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்தது.
ஆனால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. மல்லிகை கிலோ ரூ.800க்கும், கனகாம்பரம் ரூ.400, பன்னீர் ரோஜா ரூ.100, பட்டன் ரோஜ் ரூ.150, செண்டு மல்லி ரூ.20, கலர் பிச்சி ரூ.300, வெள்ளை பிச்சி ரூ.400, செவ்வந்தி ரூ.100, முல்லை ரூ.400, காக்கரட்டான் ரூ.400, வாடாமல்லி ரூ.50, கோழிக்கொண்டை ரூ.20, துளசி ரூ.30, மரிக்கொழுந்து ரூ.40 என விற்பனை ஆனது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்