search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் வரத்து அதிகரிப்பு
    X

    விற்பனைக்கு வந்த பூக்களை படத்தில் காணலாம்.

    நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் வரத்து அதிகரிப்பு

    • இன்று விநாயகர் சதுர்த்தி உற்சாக மாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நிலக்கோ ட்டை பூமார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்தது.
    • ஆனால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பூமார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு இங்கிருந்துதான் பூக்கள் அனுப்பி வைக்கப்படும். கடந்த 2 நாட்களாக ஆவணிமாத கடைசி முகூர்த்த நாளை முன்னிட்டு பூக்கள் வரத்து அதிகரித்தது. இதனால் விலையும் கூடுதலாக கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் இன்று விநாயகர் சதுர்த்தி உற்சாக மாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நிலக்கோ ட்டை பூமார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்தது.

    ஆனால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. மல்லிகை கிலோ ரூ.800க்கும், கனகாம்பரம் ரூ.400, பன்னீர் ரோஜா ரூ.100, பட்டன் ரோஜ் ரூ.150, செண்டு மல்லி ரூ.20, கலர் பிச்சி ரூ.300, வெள்ளை பிச்சி ரூ.400, செவ்வந்தி ரூ.100, முல்லை ரூ.400, காக்கரட்டான் ரூ.400, வாடாமல்லி ரூ.50, கோழிக்கொண்டை ரூ.20, துளசி ரூ.30, மரிக்கொழுந்து ரூ.40 என விற்பனை ஆனது.

    Next Story
    ×