search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுமணத் தம்பதி"

    • மணக்கோலத்தில் இறங்கிய மணமகன் மற்றும் மணமகள் கழுத்தில் மாலையுடன் விறுவிறுவென அரசு மதுபானக் கடைக்கு சென்றனர்.
    • தம்பதி இருவரும் மதுபானம் வாங்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பொதுவாக திருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதியினர் கோவிலுக்கோ அல்லது மறுவீட்டிற்கோ செல்வதை தான் நாம் வழக்கமாக பார்த்திருப்போம்.

    ஆனால், கேரளாவில் புதுமணத் தம்பதி திருமணம் முடிந்த கையோடு நேராக அரசு மதுபானக் கடைக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி சென்று அனைவரையும் வியப்படைய வைத்தனர்.

    கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் காரில் இருந்து மணக்கோலத்தில் இறங்கிய மணமகன் மற்றும் மணமகள் கழுத்தில் மாலையுடன் விறுவிறுவென அரசு மதுபானக் கடைக்கு சென்று இருவரும் மதுபாட்டில்களை காசு கொடுத்து வாங்கிக் கொண்டு புறப்பட்டனர்.

    தங்களது திருமணம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக புதுமணத் தம்பதி மதுபானக் கடைக்கு சென்றது சற்று விசித்திரமாகவே இருந்தது.

    மணக்கோலத்தில் தம்பதி இருவரும் மதுபானம் வாங்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

    ×