search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுப்பெண் கொலை"

    • இசக்கி லெட்சுமிக்கும் எனது அண்ணன் வெங்கடேஷ் என்பவருக்கும் கடந்த 31-ந் தேதி தேதி நிச்சயிக்கப்பட்டு 1-ந் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்ததது.
    • திருமண நாளுக்கு முந்தைய நாள் இசக்கி லெட்சுமி ஏற்கனவே காதலித்து வந்த கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ஒருவருடன் மதுரை சென்று அங்கு திருமணம் செய்து கொண்டனர்.

    கடையம்:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகள் இசக்கி லெட்சுமி (வயது 23).

    இவர் நேற்று தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள துப்பாக்குடி காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ஆனந்த் ( 23). அவரது நண்பர் சிவா ( 21) ஆகியோர் இசக்கி லெட்சுமியை கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆனந்த் கூறியதாவது:-

    இசக்கி லெட்சுமிக்கும் எனது அண்ணன் வெங்கடேஷ் என்பவருக்கும் கடந்த 31-ந் தேதி தேதி நிச்சயிக்கப்பட்டு 1-ந் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்ததது. ஆனால் திருமண நாளுக்கு முந்தைய நாள் இசக்கி லெட்சுமி ஏற்கனவே காதலித்து வந்த கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ஒருவருடன் மதுரை சென்று அங்கு திருமணம் செய்து கொண்டனர்.

    இதற்கிடையே திருமணமான 3 நாட்களில் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் இசக்கி லெட்சுமி கோபித்துக்கொண்டு கடையம் அருகே உள்ள கோவிந்தபேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டார். எனது அண்ணனை இசக்கி லெட்சுமி திருமணம் செய்யாமல் சென்றதால் எங்கள் குடும்பத்திற்கு பெரும் அவமானம் ஏற்பட்டது. இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். எனினும் குறித்த தேதியில் எனது அண்ணணுக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

    இதற்கிடையே கோவிந்தபேரி வந்த இசக்கி லெட்சுமி எனது அண்ணணுக்கு போன் செய்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். தொடர்ந்து இதுபோல் அவர் நடந்து கொள்ளவே இதுதொடர்பாக என்னிடம் கூறி வெங்கடேஷ் ஆதங்கப்பட்டார்.

    ஏற்கனவே எனது அண்ணனை திருமணம் செய்யாமல் சென்றதால் ஆத்திரத்தில் இருந்த எனக்கு இந்த செயல் மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி எனது துப்பாக்குடி அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு வந்த இசக்கிலெட்சுமியை எனது நண்பர் சிவாவுடன் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிசென்றோம். போலீசார் எங்களை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×