search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய டாஸ்மாக்"

    • கலெக்டரிடம் பா.ம.க.வினர் மனு
    • இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படும் என புகார்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே முள்ளுவாடி ஊராட்சி கலவை கூட்ரோடு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு. தெரிவித்து ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ப.சரவணன் தலைமையில் அக்கட்சி யினர், கலெக்டர் வளர்மதி யிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

    அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    புதிய டாஸ்மாக்கடை அமைய உள்ள இடம் பிரதான சாலையாக உள்ளதால் பல கிராமங்க ளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக ளுக்காக இந்த சாலை வழியாக செல்ல வேண்டி உள்ளது. அதே போல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நிறைந்த பகுதியாக உள்ளதால், மதுக் கடை மூலம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

    அப்போது ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் ந. சுப்பிரமணி,மாவட்ட தலைவர் எம்.எஸ்.பாரி, மாவட்ட உழவர் பேரியழக்க செயலாளர் மணிவண்ணன்,மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் கிரி குமரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் டி.டி.மகேந்திரன், பசுமை த்தாயகம் பொறுப்பாளர் ரத்தின குமார், செல்வமுருகன், அஜய் ஆறுமுகம் மகளிர் சங்க நிர்வாகிகள் தேவி, அமுதா சிவா, ஒன்றிய செயலா ளர்கள், லோக நாதன், பாரத், நகர செயலாளர் துளசி ரவி முள்ளுவாடி தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர் செந்தாமரை ரஜினி ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×