search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பின்னலாடை கண்காட்சி"

    • கண்காட்சியை 30 முகவர்கள், 325 முன்னோடி வர்த்தக அலுவலகத்தினர் பார்வையிட்டனர்.
    • ரூ.200 கோடிக்கு ஆர்டர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    இந்திய நிட்பேர் அசோசியேசன் சார்பில் 49-வது சர்வதேச பின்னலாடை கண்காட்சி திருமுருகன் பூண்டி அருகே உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் நடைபெற்று முடிவடைந்தது. இந்த கண்காட்சி குறித்து இந்திய நிட்பேர் அசோசியேசன் தலைவரும், இந்திய

    ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் ஏ.சக்திவேல் கூறியதாவது :- கண்காட்சியை 30 முகவர்கள், 325 முன்னோடி வர்த்தக அலுவலகத்தினர், வர்த்தக விசாரணை அலுவலர்கள் பார்வையிட்டனர். மேலும் புதிதாக அமெரிக்கா, ஐரோப்பா, உகாண்டா, பிரான்ஸ், இத்தாலி, கனடா, வங்கதேசம், சவுதி அரேபியாவில் இருந்து வர்த்தக முகவர்கள் வந்து பார்வையிட்டுள்ளனர். 3 நாட்களில் செயற்கை நூலிழை ஆடை தயாரிப்பு தொடர்பாக ரூ.400 கோடிக்கு வர்த்தக விசாரணை நடந்துள்ளது. அதில் உடனடியாக ரூ.200 கோடிக்கு ஆர்டர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த கண்காட்சி மூலமாக பருத்தி இல்லாத செயற்கை நூலிழை ஆடைகளுக்கான ஏற்றுமதி ஆர்டர் வர்த்தக விசாரணை நடைபெற்றுள்ளது. இதன் மூலமாக அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.8 ஆயிரத்து 200 கோடிக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். கண்காட்சியில் பங்கேற்றவர்கள், முகவர்களின் எதிர்பார்ப்பை இந்த கண்காட்சி திருப்திப்படுத்தியது. 50-வது பொன்விழா கண்காட்சியில் பங்கேற்க ஆர்வமுடன் உள்ளதாக தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • 11வது கண்காட்சி உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் 6 நாட்கள் நடக்கிறது.
    • டிச., 8 ந் தேதி துவங்கி,13 வரை கண்காட்சி நடக்கும்.

    திருப்பூர் :

    இந்தியா ஐ.டி.எம்.இ., சொசைட்டி' சார்பில் ஜவுளித்துறையை மேம்படுத்தும் வகையில், 'இந்தியா ஐ.டி.எம்.இ., கண்காட்சி- –2022 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். கொரோனா காரணமாக, 2016க்கு பிறகு, 11வது கண்காட்சி உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் 6 நாட்கள் நடக்கிறது. வரும் டிச., 8 ந் தேதி துவங்கி, 13 வரை நடக்கும் கண்காட்சியில், இந்தியா ஜவுளி மற்றும் ஜவுளி இயந்திர வர்த்தகத்தின் திருப்பு முனையாக அமையும் என தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர். இது குறித்து இந்தியா ஐ.டி.எம்.இ., நிறுவன பொருளாளர் கேதன் சங்வி கூறியதாவது:-

    இந்தியாவில் நடக்கும் பிரமாண்டமான கண்காட்சி 2.35 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் எழுச்சியுடன் நடக்கிறது. ஜவுளி மற்றும் ஜவுளி இயந்திரங்களை காட்சிப்படுத்த, 22 பிரிவுகளாக, 1,100 ஸ்டால்கள் அமைய உள்ளன. உலகின் மிகப்பெரிய ஜவுளி கேந்திரமாக உள்ள இந்தியாவில் நடக்கும் கண்காட்சி, சர்வதேச அளவில் புதிய வர்த்தக வாய்ப்புகளை வழங்கும். அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரான இயந்திரங்கள், ஜவுளித்துறையில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும்.

    கண்காட்சியில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பெல்ஜியம், பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 110க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 'இந்தியா ஐ.டி.எம்.இ.,–2022' கண்காட்சி நார்ப்பொருள், ஜவுளி உற்பத்தி தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு நடக்க உள்ளது. சர்வதேச சந்தைகளில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் பார்வையாளர்களும் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடுகள் மத்தியில், இந்த கண்காட்சி பெரும் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அமையும். சர்வதேச அளவில் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்பும் நிறுவனங்கள் மற்றும் பொருளாதார நிறுவனங்களுக்கு இந்த கண்காட்சி யில் பங்கேற்கின்றன. திருப்பூர், கோவை ஈரோடு, சேலம், மதுரை உட்பட பல்வேறு மாவட்ட மற்றும் மாநில தொழில்துறையினர் கண்காட்சியில் பங்கேற்று வர்த்தக வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×