search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு எச்சரிக்கை"

    இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை ஏற்பட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெயில்வே நிர்வாகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்திய ரெயில்வே பாதுகாப்பு படை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #IndiaPakistanWar #IndianRailway
    புதுடெல்லி:

    இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை ஏற்பட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெயில்வே நிர்வாகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்திய ரெயில்வே பாதுகாப்பு படை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    அதில், இந்தியாவில் உள்ள அனைத்து ரெயில்வே ஜெனரல் மானேஜர்களுக்கும் தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு எல்லா ரெயில்களையும் மிகுந்த பாதுகாப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில் இயக்க பகுதிகள் மற்றும் ரெயில் நிலையங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இயக்கப்படும் ரெயில்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு குறைபாடு உள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
    ×