search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரமக்குடி பெண் போலீஸ்"

    போலீஸ் நிலையத்தில் கேக் ஊட்டிய விவகாரம் தொடர்பாக பெண் போலீஸ்-ஏட்டு உள்பட 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

    பரமக்குடி:

    தமிழகத்தில் தொடர்ந்து சில போலீசாரின் வரம்பு மீறிய செயல்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக திகழவேண்டிய போலீசார் பொது இடத்தில் தரக்குறைவாக நடந்து கொள்வதும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதும் கண்கூடாக நடந்து வருகிறது.

    அதுவும் இன்றைய நவீன காலத்தில் போலீசார் செய்யும் சிறு தவறுகூட சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது. இதனால் பொதுமக்கள்-போலீசார் இடையேயான நல்லுறவு கேள்விக்குறியாகி விடுகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு எமனேசுவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி பொதுஇடத்தில் முதியவரை தாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் அடங்குவதற்குள் போலீஸ் நிலையத்திலேயே பெண் போலீஸ், ஏட்டுக்கு கேக் ஊட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    பரமக்குடி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி புரியும் முத்துப்பாண்டிக்கு, அதே போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் ஏட்டு மாரியம்மாள் கேக் ஊட்டினார். அப்போது அருகில் இருந்த போலீஸ்காரர்கள் ராஜ்குமார், முத்துவேல்ராஜன் ஆகியோர் இதனை படம் எடுத்துள்ளனர்.

    இந்த வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

    இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸ் நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதில் போலீஸ் நிலையத்தில் பணி நேரத்தில் போலீஸ்காரர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து ஏட்டு முத்துப்பாண்டி, பெண் போலீஸ் ஏட்டு மாரியம்மாள், போலீஸ்காரர்கள் ராஜ்குமார், முத்துவேல்ராஜன் ஆகியோர் ராமநாதபுரம் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். #tamilnews

    இராமநாதபுரம் மாவட்டம் பரமகுடி காவல்நிலையத்தில் சீருடை இருந்த பெண் போலீஸ் ஒருவர் பணியில் இருந்த ஏட்டு-க்கு கேக் ஊட்டும் வீடியோ காட்சி 'வாட்ஸ்அப்பில்' பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    இராமநாதபுரம்:

    சமூக வலை தளங்களான ‘வாட்ஸ்-அப்’, பேஸ்புக் போன்றவை எந்த அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சியில் மக்களுக்கு பயனைத் தருகின்றனவோ, அந்த அளவிற்கு கெடுதலையும் தருகிறது. அதே நேரம் சிலரின் தவறுகளையும் வெளிக்கொண்டு வந்து விடுகிறது.

    அப்படி வெளியான ஒரு ‘வாட்ஸ்-அப்’ தற்போது வைரலாக பரவி வருகிறது.

    அதில் சீருடை அணிந்த பெண் போலீஸ் ஏட்டு ஒருவருக்கு கேக் ஊட்டுகிறார். இந்த ‘வைரல்’ வேகமாக பரவியதால் காவல் துறை விசாரணையில் இறங்கியது. அந்த காட்சிகள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காவல் நிலையத்தில் நடந்தவை என தெரிய வந்தது. சீருடையில் இருப்பவர் பரமக்குடி தாலுகா போலீஸ் ஏட்டு மாரியம்மாள்.

    இவர், அருகில் உள்ள பரமக்குடி நகர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் டீ டைம் உரையாடலில் பங்கேற்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ஏட்டு முத்துப்பாண்டிக்கு கேக் ஊட்டியதை சக போலீஸ்காரர் படம் பிடித்து ‘வாட்ஸ்-அப்’ மூலம் வைரலாக்கி உள்ளார்.

    பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு குறி சொல்பவரை அடித்து உதைத்த சம்பவம் ‘வாட்ஸ்- அப்’ மூலம் பரவியது. இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் போலீஸ் ஏட்டுகளின் இந்த காட்சி ‘வாட்ஸ்-அப்’களில் வைரலாகி உள்ளது.

    கண்காணிப்பு காமிராக்களை போலீஸ் நிலையங்களில் பொருத்தினால் குற்ற நிகழ்வுகளை தடுக்கலாம் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
    ×