search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர் இழப்பீட்டு தொகை"

    • கடலாடி தாலுகாவை வறட்சி பகுதியாக அறிவித்து பயிர் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.
    • சிக்கல் காவல் நிலையம் முதல் சப்பாணி கோவில் வரை தார் சாலை அமைக்க வேண்டும்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி யூனியன் கவுன்சில் கூட்டம் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் அண்ணாதுரை, மேலாளர் முரளிதரன், முன்னாள் தலைவர் முனியசாமி பாண்டியன், துணை சேர்மன் ஆத்தி முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    கவுன்சிலர்கள் குமரையா, பிச்சை உள்ளிட்ட கவுன்சிலர்கள்: கடலாடி தாலுகாவை வறட்சி பகுதியாக அறிவித்து பயிர் இழப்பீட்டு தொகை மற்றும் வறட்சி நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். ஆணையாளர்: இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றி கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

    கவுன்சிலர் வசந்தா கதிரேசன்: மாரியூர் ஊராட்சி வேலாயுதபுரம் கிராமத்திற்கு தார் சாலை அமைக்க வேண்டும். மாரியூர் வடக்கு தெருவில் நாடக மேடை அமைக்க வேண்டும்.

    கவுன்சிலர் ஜெயச்சந்திரன்: சாத்தங்குடி வெள்ளங்குளம் கிரா மத்திற்கு தார் சாலை அமைக்க வேண்டும். கடுகு சந்தை சத்திரம் கிராம தெருக்கள் முழுவதும் பேவர் பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர் காதர் சுல்தான் அலி: வாலிநோக்கம் கிராமத்தில் குடிநீருக்காக பைப் லைன் பதிப்பதற்கு சாலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சேதமடைந்த சாலைகளை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் மாயகிருஷ்ணன்: ஏ.புன வாசல் ஊராட்சி பாடு வனேந்தல் கிராமத்திற்கு மெட்டல் சாலை மற்றும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். கவுன்சிலர் குஞ்சரம் முருகன்: டி.எம்.கோட்டை கிராமத்தில் இருந்து செவல்பட்டி செல்லும் சாலை தார் சாலையாக அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் பைரோஸ் பானு ஜலீல்: மாரியூர் கடற்கரை செல்லும் சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பிலான் கிராமத்தில் இருந்து ஒப்பிலான் கடற்கரைக்கு செல்லும் சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும்.

    கவுன்சிலர் அம்மாவாசி: சிக்கல் கிராமத்தில் உள்ள பாண்டியன் ஊரணியை சுற்றி முள்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிக்கல் காவல் நிலையம் முதல் சப்பாணி கோவில் வரை தார் சாலை அமைக்க வேண்டும். சிக்கல் மேற்கு காலனி பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கவுன்சிலர் ராஜேந்திரன்: வாலிநோக்கம் கிராமத்தில் இருந்து சிறைக்குளம் செல்லும் சாலை, ராஜாக்கள் பாளையம் கிராமத்தில் இருந்து காமராஜர்புரம் செல்லும் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் செய்யது ராவ்யா செய்யது அலி: கீழச் சிறுபோது கவுன்சிலுக்கு உட்பட்ட மேலச்சிறு போது, கீழச்சிறுபோது, சவேரியார் பட்டினம் ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் அனைத்து தெருக்களுக்கும் பேவர் பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர்கள் பானுமதி ராமமூர்த்தி, மகேஸ்வரி சக்திவேல், முருக லட்சுமி மலைராஜ், நரிப்பையூர் முருகன், உள்ளிட்டோரும் அவர்களது பகுதி கோரிக்கை களை வலியுறுத்தினர்.

    கவுன்சிலர்களின் கோரிக்கைகள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலாடி யூனியன் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தெரிவித்தார்.

    ×