search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூற்றாண்டு பூங்கா"

    • திருப்புவனத்தில் கருணாநிதி நூற்றாண்டு பூங்கா பொதுமக்களின் வரவேற்பை பெற்றது.
    • பூங்காவில் உள்ள மரக்கன்றுகளை பேரூரட்சி தலைவர் சேங்கைமாறன் பார்வையிட்டார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி யில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதன் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த சேங்கைமாறன் பதவி வகித்து வருகிறார்.

    தற்போதைய பேரூராட்சி மன்றம் அமைந்தது முதல் திருப்புவனம் நகரில் அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேவை யான வடிகால், சாலை, சிமிண்ட்சாலை, பேவர் பிளாக் சாலை, மின்விளக்கு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

    மேலும் அந்தந்த வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் குறைகளை சுட்டிக்காட்டும் நிலையில் தலைவர் சேங்கைமாறன் நேரடி பார்வையில் இக் குறைகளை போக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்புவனம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பாக்கியா நகரில் பிரமாண்ட பூங்கா அமைத்து அதில் சிறுவர்கள் விளையாட விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மேலும் பூங்காவில் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் பேவர்பிளாக் கல் பதிக்கப்பட்டுள்ளதால் காலை, மாலை நேரங்களில் ஏராளமானோர் இங்கு வந்து நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.

    பெண்கள் மாலை நேரங்க ளில் பூங்காவில் உட்கார்ந்து தங்கள் குழந்தைகள் விளையாடுவதை ரசிக்கின்ற னர். இப் பூங்காவில் பொது மக்களின் வசதிக்காக கழிப்பறை வசதி ஏற்ப டுத்தப்பட்டுள்ளது. மேலும் தலைவர் சேங்கைமாறன் ஆலோசனைப்படி இங்கு தற்போது பலன் தரும் வாழை , தென்னை, மற்றும் பழ மரக்கன்றுகள், பூச்செடிகள் உள்ளிட்டவை நடப்பட்டு பேரூராட்சி பணியாளர்களால் பரா மரிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் இரவு நேரத்தில் கண்ணைக்கவரும் வகையில் மின்விளக்குகள் எரிய விடப்பட்டுள்ளன. அனைத்து வசதிகளும் கொண்ட இந்த பூங்காவுக்கு திருப்புவனம் மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

    இதுகுறித்து தலைவர் சேங்கைமாறன் கூறுகையில், எங்களது கனவு திட்டமான இந்த கருணாநிதி நூற்றாண்டு விழா பூங்காவை அமைத்து பரா மரித்து வருகிறோம். தினமும் இப்பூங்காவுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் நகரில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்குத் தேவை யான அடிப்படை வசதி களுக்கு நிதி ஒதுக்கி திட்டங்கள் நிறை வேற்றப்படுகிறது. அம்ருத் 2.0 திட்டத்தில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது என்றார்.

    ×