search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு"

    நல்.செந்தில்குமார் இயக்கத்தில் மகேந்திரன் - மியாஸ்ரீ நடிப்பில் சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #NammaOorukkuEnnthanAachu
    பல அரசியல் குழப்பங்கள், பொருளாதார சிக்கல்கள், வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் என தொடர்ந்து தமிழ்நாடு சிக்கல்களை சந்தித்து வரும் வேளையில், இதனை பிரதிபலிக்கும் வகையில் “நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு” என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் நல்.செந்தில்குமார்.

    அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு கிராமத்தில் இதுவரை எந்த தலைமுறையும் சந்திக்காத, பார்க்காத பல்வேறு மர்மமான சம்பவங்களும், பிரச்சனைகளும் அடுத்தடுத்து தொடர்ந்து நடக்கின்றது. ஒரு கட்டத்தில் பிரச்சனைகள் தீவிரமடைந்து மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களுக்கு என்ன காரணம் என்பதை கதாநாயகன் கண்டுபிடித்து தனது கிராமத்தையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார் என்பதை சஸ்பென்ஸ், திரில்லர் கலந்து விறுவிறுப்பான திரைக்கதையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் கூறுகிறார். 



    மகேந்திரன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மியாஸ்ரீ நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், மனோஜ் குமார், பசங்க சிவக்குமார், அப்புக்குட்டி, தவசி, பெஞ்சமின், லொள்ளு சபா உதயா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    ஜெ.ஆர்.கே ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். கம்பம் மூர்த்தி படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஜி.எஸ். ஆர்ட்ஸ் சார்பில் பூக்கடை ஜி.சேட்டு இந்த படத்தை தயாரிக்கிறார். #NammaOorukkuEnnthanAachu #Mahendran #MiyaSri

    மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட இருக்கிறார். #NammaOorukuEnnaDhanAachu
    ‘நாட்டாமை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர் மாஸ்டர் மகேந்திரன். இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார்.

    தற்போது இவர் கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ‘ரங்கராட்டினம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் மகேந்திரன் ஜோடியாக ஷில்பா நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

    இப்படத்தை அடுத்து ‘நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் நாளை மாலை 5 மணிக்கு வெளியிட இருக்கிறார்.



    இந்த படத்தை நல்.செந்தில் குமார் இயக்குகிறார். ஜி.எஸ்.ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 
    ×