search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடாஷா"

    • பாகிஸ்தான் ரசிகையான நடாஷா இந்தியா இறுதிப் போட்டியில் விளையாட வாழ்த்து தெரிவித்தார்.
    • 20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர் கொள்ள விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் அணியின் ஷதாப் கான், ரிஸ்வான் தெரிவித்து உள்ளனர்.

    20 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 153 என்ற இலக்கை துரத்தியதில் அவர்கள் 7 விக்கெட்டுகள் மற்றும் 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றனர். பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தனர்.

    இந்த போட்டியில் பெரிதும் வைரலானது பாகிஸ்தான் ரசிகை ஒருவர். பாகிஸ்தான் ரசிகையின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

    பாகிஸ்தான் ரசிகையான நடாஷா பாகிஸ்தானுடன் இந்தியா இறுதிப் போட்டியில் விளையாட வாழ்த்து தெரிவித்தார். பாபர் ஆசம் தலைமையிலான அணி ரோகித் சர்மா தலைமையிலான அணியை வெற்றி பெறும் என கூறினார். நம்பிக்கையுடன், இந்தியா இறுதிப் போட்டிக்கு வரும். நாம் அவர்களை வீழ்த்த வேண்டும்.

    பாகிஸ்தான் அணியுடன் இறுதிப்போட்டியில் இந்தியாவே விளையாட வேண்டும் என்பது கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனையே முன்னாள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்களும் எதிர்நோக்கி உள்ளனர். அதுமட்டுமன்றி பாகிஸ்தான் வீரர்களும் இந்தியாவுடனே மோத விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர் கொள்ள விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் அணியின் ஷதாப் கான், ரிஸ்வான் தெரிவித்து உள்ளனர். பாகிஸ்தான் அணியின் ஆலோசகரான மாத்யூ ஹைடன் மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சளரான சோயப் அக்தரும் இந்தியவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டியில் விளையாட விரும்புவதாக தெரிவித்து உள்ளனர். எனவே பலரது எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா தனது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது.

    ×