search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைதிருட்டு"

    • பெண், சிறுமியுடன் வெளியேறிய பின் ஊழியர் கடையில் இருந்த தங்க செயின்களை சரிபார்த்தனர். அப்போது ஒரு சங்கிலி குறைவாக இருந்தது தெரிய வந்தது.
    • கடையில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவை சோதனை செய்தபோது அதில் தங்க சங்கிலியை அந்த பெண் ஆடைக்குள் மறைத்து வைத்து திருடிச் சென்றது தெரிய வந்தது.

    பழனி:

    பழனியில் திண்டுக்கல் சாலையில் நகைக்கடை உள்ளது. இங்கு ஒரு சிறுமியுடன் வந்தபெண் ஊழியர்களிடம் தங்க சங்கிலி வாங்க வேண்டும் என கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து பல்வேறு மாடல்களை கடை ஊழியர்கள் காண்பித்தனர்.

    அதனை பார்த்த பெண் மற்றொரு நாள் வந்து வாங்கிக் கொள்வதாக கூறி விட்டு சிறுமியுடன் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ஊழியர் கடையில் இருந்த தங்க செயின்களை சரிபார்த்தனர். அப்போது ஒரு சங்கிலி குறைவாக இருந்தது தெரிய வந்தது.

    உடனடியாக கடையில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவை சோதனை செய்தபோது அதில் தங்க சங்கிலியை அந்த பெண் ஆடைக்குள் மறைத்து வைத்து திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் விரட்டிச் சென்று அந்த பெண்ணை பிடித்து பழனி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காஜாமைதீன் மனைவி ஆமினா (40) என்பது தெரிய வந்தது. மகளுடன் நகைக்கடையில் தங்க சங்கிலி திருடியதை ஒப்புக் கொண்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்

    ×