என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நகைதிருட்டு"
- பெண், சிறுமியுடன் வெளியேறிய பின் ஊழியர் கடையில் இருந்த தங்க செயின்களை சரிபார்த்தனர். அப்போது ஒரு சங்கிலி குறைவாக இருந்தது தெரிய வந்தது.
- கடையில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவை சோதனை செய்தபோது அதில் தங்க சங்கிலியை அந்த பெண் ஆடைக்குள் மறைத்து வைத்து திருடிச் சென்றது தெரிய வந்தது.
பழனி:
பழனியில் திண்டுக்கல் சாலையில் நகைக்கடை உள்ளது. இங்கு ஒரு சிறுமியுடன் வந்தபெண் ஊழியர்களிடம் தங்க சங்கிலி வாங்க வேண்டும் என கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து பல்வேறு மாடல்களை கடை ஊழியர்கள் காண்பித்தனர்.
அதனை பார்த்த பெண் மற்றொரு நாள் வந்து வாங்கிக் கொள்வதாக கூறி விட்டு சிறுமியுடன் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ஊழியர் கடையில் இருந்த தங்க செயின்களை சரிபார்த்தனர். அப்போது ஒரு சங்கிலி குறைவாக இருந்தது தெரிய வந்தது.
உடனடியாக கடையில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவை சோதனை செய்தபோது அதில் தங்க சங்கிலியை அந்த பெண் ஆடைக்குள் மறைத்து வைத்து திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் விரட்டிச் சென்று அந்த பெண்ணை பிடித்து பழனி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காஜாமைதீன் மனைவி ஆமினா (40) என்பது தெரிய வந்தது. மகளுடன் நகைக்கடையில் தங்க சங்கிலி திருடியதை ஒப்புக் கொண்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்