search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில்நுட்பங்கள்"

    • சீர்காழி சபாநாயக முதலியார் மேல்நிலைப்பள்ளியில் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
    • மதிப்பு கூட்டுதல் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியும் நடத்தப்பட உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடை பெறுகிறது.

    வேளாண்மை யில் பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானிய பயிர்களின் முக்கியத்துவத்தை விவசாயிகளுக்கு தெரிவிக்கும் வகையில் மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சீர்காழி சபாநாயக முதலியார் மேல்நிலைப்பள்ளியில் நாளை
    (30-ந்தேதி) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

    இதில் பாரம்பரிய பயிர் ரகங்களின் சாகுபடி தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டுதல் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியும் நடத்தப்பட உள்ளது.

    எனவே, மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன் அடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்னையில் எந்திரங்களின் அவசியம் அதன் பயன்பாடுகள் மற்றும் தென்னை வளர்ச்சி திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்கள்.
    • தென்னையில் தற்போது நிலவும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் பற்றி செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பங்குளம் ஊராட்சியில் அமைந்துள்ளது தென்னை ஆராய்ச்சி நிலையம். இங்கு உலக தென்னை நாளை முன்னிட்டு நேரடி பயிற்சி நடைபெற்றது.

    விழாவினை முனைவர் அருண்குமார், உதவி பேராசிரியர் (தோட்ட க்கலை) வரவேற்று வளர்ச்சி தாங்கி வளர கூடிய தென்னை நெட்டை ரகங்கள், அதனின் தொடர் வளர்ச்சிக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோ சனைகள் மற்றும் தென்னை சார்ந்த மதிப்பு கூட்டுதல், உற்பத்தி பெருக்கம் மற்றும் தென்னை ஒருங்கிணைந்த பண்ணையும் எந்திரமாக்கல், மதிப்பு கூட்டுதல் மற்றும் உலக தென்னை நாள் விழா கொண்டாடுவது நோக்கம் மற்றும் அவசியம் குறித்து பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் திருமதி மாலதி வேளாண்மையை உதவி இயக்குனர் பட்டுக்கோட்டை மற்றும் திருமதி அப்சரா வேளாண் அலுவலர் பட்டுக்கோட்டை சிறப்புரையாற்றினார்கள். உரையில் தென்னையில் இயந்திரங்களின் அவசியம் அதன் பயன்பாடுகள் மற்றும் தென்னை வளர்ச்சி திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்கள்.

    ராமராஸ் ஊராட்சி மன்ற தலைவர் வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் செயல் விளக்கங்கள் முக்கியமாக கோடையில் தென்னையில் தீவிரமாக பரவும் தஞ்சாவூர் வாடல் நோய் காரணியை கட்டுப்படுத்த வேர் மூலம் ஹெக்சகோனசோல் பூஞ்சான கொல்லியை செலுத்துதல் வட்ட பாத்தியில் ஒரு சத போட்டோ கலவை தயாரித்து மண்ணில் ஊற்றுதல், பேசில்லஸ் எதிர் உயிர் கலவையை தொழு உரத்துடன் இடுதல் மழைக்காலத்தில் பரவும் குருத்தளழுகள் நோய் காரணியை கட்டுப்படுத்த 0.3 சதாம் காப்பர் ஆக்ஸி குளோரைடு மருந்தை குருத்தில் ஊற்றுதல் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.

    தென்னை விவசாயி களின் கேள்வி பதில் விவசாயிகள் மற்றும் விஞ்ஞா னிகள் கருத்து பரிமாற்றம் போன்றவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 40 க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சியினை திரு வள்ளிநாயகம் (இளநிலை ஆராய்ச்சியாளர்) ஏற்பாடு களை செய்து ஒருங்கிணைத்து செயல்பட்டார்.

    ×