search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் அதிபர் ரன்வீர்ஷா"

    சிலைக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவை 15 நாட்கள் காவலில் எடுக்க முடிவு செய்த காவல்துறை, இது தொடர்பாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். #Idoltheftcase #RanvirShah #KiranRao #HighCourt
    சென்னை:

    சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு நபர்களிடம் சிலைகளை கொடுத்து வைத்திருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில் தீனதயாளனின் கூட்டாளிகளை கைது செய்யவும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த வரிசையில் தொழில் அதிபர் ரன்வீர்ஷா, அவரது தோழியான கிரண் ராவ் ஆகியோர் போலீஸ் வலையில் சிக்கி இருக்கிறார்கள்.

    சிலை தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையை தொடர்ந்து ரன்வீர்ஷாவையும், கிரண் ராவையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை. ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவருக்கும் போலீஸ் தரப்பில் சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் இதனை ஏற்று ஆஜராகவில்லை. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.

    இந்நிலையில், ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவின் முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது, அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் ரன்வீர் ஷா, கிரண் ராவ் இருவரையும் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவருக்கும் உடனடியாக முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

    இதனை தெரிவித்த நீதிபதி 2 பேரின் வீட்டிலும் கைப்பற்றப்பட்ட சிலைகள் பற்றிய விவரங்களை வருகிற 23-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதுவரையில் முன் ஜாமீன் மனு மீது உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் நீதிபதி கூறினார்.

    ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆகியோரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சிலைகளை தனியார் நிறுவனத்திடம் வாங்கியதாக குறிப்பிட்டு இருந்தனர். இதனை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. புராதன சிலைகளை விற்பனை செய்ய எந்த தனியார் நிறுவனத்துக்கும், அமைப்புக்கும் அனுமதி இல்லை. அப்படி விற்றால் அது சட்ட விரோதம் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

    தீனதயாளன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே ரன்வீர்ஷா, கிரண் ராவிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருவருக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக தீனதயாளன் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சிலை கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. #Idoltheftcase #RanvirShah #KiranRao  #HighCourt
    சிலை கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள தொழில் அதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவ் தமிழகத்தில் இருந்து தப்பி சென்றிருப்பதாகவும் அவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் வெகுமதி வழங்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. #Idoltheftcase
    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஏராளமான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் கடத்தல் சிலைகளின் பின்னணி குறித்து விசாரணை நடத்தினர்.

    தீனதயாளன் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு நபர்களிடம் சிலைகளை கொடுத்து வைத்திருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில் தீனதயாளனின் கூட்டாளிகளை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த வரிசையில் தொழில் அதிபர் ரன்வீர்ஷா, அவரது தோழியான கிரண்ராவ் ஆகியோர் போலீஸ் வலையில் சிக்கி இருக்கிறார்கள்.

    சைதாப்பேட்டையில் உள்ள ரன்வீர்ஷாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 200-க்கும் மேற்பட்ட கற்சிலைகள், கல் தூண்கள் உள்ளிட்டவை சிக்கின. இதனைத் தொடர்ந்து ரன்வீர்ஷாவின் பண்ணை வீடுகள், பங்களாக்களிலும் சோதனை நடைபெற்றது.

    கோப்புப்படம்

    போயஸ்கார்டனில் உள்ள கிரண்ராவின் வீட்டிலும் சோதனை நடந்தது. இதில் வீட்டினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கிரண்ராவ் ராயப்பேட்டையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

    சிலை தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையை தொடர்ந்து ரன்வீர்ஷாவையும், கிரண்ராவையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை. ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவருக்கும் போலீஸ் தரப்பில் சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் இதனை ஏற்று ஆஜராகவில்லை.

    ரன்வீர்ஷா தனது வக்கீலை அனுப்பி வைத்திருந்தார். அவர் 28-ந்தேதி வரையில் ரன்வீர்ஷா ஆஜராக அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை போலீசார் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கிடையே 2 பேரும் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    இதனை விசாரித்த நீதிமன்றம் சிலைகளை வைத்திருப்பதற்கான ஆவணங்கள் இருந்தால் அதனை ஆதாரமாக கோர்ட்டில் தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டனர்.

    இது தொடர்பான எந்த ஆவணங்களும் இல்லாத காரணத்தாலேயே ரன்வீர்ஷாவும், கிரண்ராவும் தப்பி ஓடி விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவரையும் கைது செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

    இவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் பரிசு சன்மானமாக வழங்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். ரன்வீர்ஷாவும், கிரண்ராவும் தமிழகத்தில் இருந்து தப்பி ஓடி விட்டது தெரிய வந்துள்ளது. அவர்கள் வடமாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    இதையடுத்து வெளி மாநில போலீசாரின் துணையுடன் ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவரையும் பிடிக்க நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. இருவரை பற்றியும் தகவல் தெரிந்தவர் துப்பு கொடுக்கலாம் என்றும் அவர்களது பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சிலை தடுப்பு பிரிவு போலீசார் கூறினர்.

    ரன்வீர்ஷா, கிரண்ராவை பிடிக்க போலீசார் வேகம் காட்டி இருப்பதால் சிலை கடத்தல் வழக்கில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Idoltheftcase #RanvirShah #KiranRao
    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ரன்வீர்ஷாவுக்கு பதில் அவரது வக்கீல் தங்கராசு ஆஜராகி விளக்கம் அளித்தார். #IdolWingRaids #PonManickavel

    சென்னை:

    சைதாப்பேட்டையைச் சேர்ந்த தொழில் அதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் பங்களாக்களில் நூற்றுக்கணக்கான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் கற்சிலைகள், துண்கள் உள்ளிட்ட 91 வகையான பழங்கால பொருட்கள் மீட்கப்பட்டன. மேல்மருவத்தூர் மற்றும் படப்பை பகுதிகளில் உள்ள பண்ணை வீடுகளில் இருந்து 132 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சிலை தடுப்பு பிரிவு போலீசார் ரன்வீர்ஷாவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். அதில் இன்று காலை 10 மணிக்கு கிண்டியில் உள்ள சிலை தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால் ரன்வீர்ஷாவுக்கு பதில் அவரது வக்கீல் தங்கராசு ஆஜரானார். அவர் ரன் வீர்ஷாவால் நேரில் வர முடியாதது ஏன்? என்பது பற்றி போலீசாரிடம் விளக்கினார்.

    ரன்வீர்ஷாவின் தந்தை மரணம் அடைந்து விட்டதால் அவரால் இன்று வர முடியவில்லை என்றும் வருகிற 28-ந்தேதிக்கு பிறகு ஆஜராவார் என்றும் கூறியுள்ளார். #IdolWingRaids #PonManickavel

    சென்னை சைதாப்பேட்டையில் தொழிலதிபர் வீட்டில் நேற்று ஏற்கனவே 82 சிலைகள் கைப்பற்றப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். #IdolWingRaids #PonManickavel
    சென்னை:

    தமிழகம் முழுவதும் பழமையான கோவில்களில் சாமி சிலைகள் கடத்தி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    தமிழக போலீசில் ஒரு பிரிவாக செயல்பட்டு வரும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த போதிலும் அந்த துறையின் தலைமை பொறுப்பை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஏற்ற பின்பே சிலை கடத்தல் தொடர்பாக மூடி மறைக்கப்பட்ட தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

    சர்வதேச கடத்தல் மன்னனான ஜெர்மனியைச் சேர்ந்த சுபாஷ் கபூர் முதலில் கைது செய்யப்பட்டார். அவருக்கு துணையாக இருந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபரான தீனதயாளன் சிக்கினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது 2 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த இந்த சோதனையில் 300-க்கும் மேற்பட்ட சிலைகள் சிக்கின.

    தீனதயாளனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தொழில் அதிபர்கள் பலருக்கு விலை உயர்ந்த சாமி சிலைகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. சைதாப்பேட்டை ஸ்ரீநகரில் வசித்து வரும் தொழில் அதிபர் ரன்வீர்ஷாவுக்கும் தீனதயாளன் சிலைகளை விற்பனை செய்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் 2016-ம் ஆண்டே போலீசார் சோதனை நடத்தினர்.

    இது தொடர்பாக ரன்வீர்ஷா சில ஆவணங்களை அளித்தார். இதனால் உடனடியாக சிலைகளை மீட்க முடியவில்லை. இதனையடுத்து 2 ஆண்டுகளாக போலீசார் காத்திருந்தனர். கோர்ட்டு அனுமதி பெற்று நேற்று அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். ரன்வீர்ஷாவின் பங்களா வீட்டில் நேற்று காலை 9. 30 மணி அளவில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் நடராஜ், டி.எஸ்.பி. சுந்தரம் மற்றும் போலீஸ் படையினர் புகுந்து சோதனை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கண்ட காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரன்வீர்ஷாவின் வீடு கோவிலை போல காட்சி அளித்தது. வீடு முழுவதும் பல்வேறு அறைகளில் கற்சிலைகளும், மெட்டல் சிலைகளும் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

    அசைக்க முடியாத அளவிலான பிரமாண்டமான கல் தூண்களும் இருந்தன. இவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.



    54 கற்சிலைகளும், 16 மெட்டல் சிலைகளும், 21 கல் தூண்களும் இருந்தன. மொத்தம் 91 சிலைகள் மீட்கப்பட்டன. இவைகளில் 54 கற்சிலைகளில் 46 சிலைகளும், 16 மெட்டல் சிலைகளும் நேற்று ரன்வீர்ஷாவின் வீட்டில் இருந்து 5 லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டன.

    5 லாரிகளில் கிரேன் மூலம் ஏற்றப்பட்ட இந்த சிலைகள் அனைத்தும் கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டு உள்ளன.

    21 கல் தூண்களும், 8 கற்சிலைகளும் ரன்வீர்ஷா வீட்டிலேயே இருந்தன. இவைகளை நேற்று இரவு போலீசார் பாதுகாத்தனர். விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று காலையில் 2-வது நாளாக மீண்டும் சோதனை நடத்தப்பட்டது.

    டி.எஸ்.பி. சுந்தரம் தலைமையிலான போலீசார் கற்சிலைகளையும், தூண் களையும் இன்று பறிமுதல் செய்தனர். இவைகளும் கிண்டியில் உள்ள அலுவல கத்துக்கு கொண்டு செல்லப் பட்டன.

    இதன் மொத்த மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என்பதால் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ரன்வீர்ஷாவின் வீட்டில் உள்ள சிலைகளுக்கு சரியான ஆவணங்கள் இருப்பதாக அவரது வக்கீல்கள் கூறியுள்ளனர்.

    இதுபற்றி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் கேட்டபோது, “பழமையான சிலைகளை வாங்குவதும், விற்பனை செய்வதும் சட்ட விரோதமாகும். அதற்கு யாராவது சான்றிதழ் அளித்திருந்தால் அதுவும் சட்டவிரோத செயலாகவே கருதப்படும்” என்றார்.

    ரன்வீர்ஷா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் கோவில்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார்.

    எனவே விசாரணை முடிவில் இந்த சிலைகளின் பின்னணியில் இருக்கும் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சிலைகளை வீட்டில் பதுக்கி வைத்தது தொடர்பாக ரன்வீர்ஷாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக அவருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளது.

    ரன்வீர்ஷா ஆஜராகும் போது, சிலை கடத்தலின் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட உள்ளது.

    கேரளாவைச் சேர்ந்த சிலை கடத்தல் கும்பல் மூலமாகவும், தீனதயாளனிடம் இருந்தும் இந்த சிலைகளை ரன்வீர்ஷா வாங்கி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் இந்த வழக்கில் தீனதயாளனிடம் மீண்டும் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கேரளாவைச் சேர்ந்த சிலை கடத்தல் கும்பலுக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளது.

    கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் தான் சிலைகள் தொடர்பான அத்தனை வழக்குகளும் நடைபெறுகின்றன. ரன்வீர்ஷாவின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் அனைத்தும் வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) கோர்ட்டில் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இதற்காக சென்னையில் இருந்து சுமார் 10 லாரிகளில் இந்த சிலைகளை பாதுகாப்புடன் கொண்டு செல்கிறார்கள்.

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யின் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறி, சிலை கடத்தல் வழக்குகளை தமிழக அரசு சி.பி.ஐ.க்கு மாற்றியது. ஆனால் சி.பி.ஐ. இதனை விசாரிக்க மறுத்து விட்டது.

    இந்த நிலையில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையால் சிலை கடத்தல் விவகாரம் மீண்டும் பூதாகரமாகி உள்ளது. #IdolWingRaids #PonManickavel
    ×