search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி பிணம் மீட்பு"

    • பண்ணை வேலை செய்து வந்தார்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பெரும்பாக்கம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நேற்று மாலை ஆண் பிணம் ஒன்று மிதந்து உள்ளது.

    இதைகண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கிணற்றில் மிதந்த பிணத்தை மீட்டு பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது கிணற்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்டது, கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த முருகன் (வயது38) என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

    மேலும் இறந்த நபர் அந்த பகுதியில் உள்ள ஒருவரின் தோட்டத்தில் பண்ணை வேலை செய்து வந்து உள்ளார். முருகன் கடந்த 27-ந் தேதி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீட்டிற்கு செல்ல வில்லை என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×