search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிற்பயிற்சி மையம்"

    • முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் விநியோகம் கடந்த 18ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது
    • விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் வருகிற 28ம் தேதி ஆகும் .

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது 

    2022 - 23ம் ஆண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் விநியோகம் கடந்த 18ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது

    கூட்டுறவு மேலாண்மை பட்டிய பயிற்சியுடன் கணினி மேலாண்மை மற்றும் நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சிக்கான சான்றிதழ் இப்பயிற்சியிலே வழங்கப்படும்.

    விண்ணப்பங்களை பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து அல்லது கீழ்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் வருகிற 28ம் தேதி ஆகும் .

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர் பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழில் பயிற்சி நிலையம் தாலுகா அலுவலகம் அருகில், முத்துப்பேட்டை ரோடு நாடிமுத்து நகர் பட்டுக்கோட்டை - 614 602 என்ற முகவரிக்கு தபால் அல்லது கொரியர் மூலம் அனுப்பி வைக்க அனுப்பி வைக்கலாம். 1.8.22 அன்று கடைசி நாளாகும்.

    பயிற்சி சேர குறைந்தபட்சம் 17 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை 12ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பட்ட படிப்பு முடித்தவர்களும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம் முதல்வரின் அலைபேசி எண்கள் 94860 45666, 97888 25339, 63811 46217 தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×