search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காய்பருப்பு ஏலம்"

    • எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.
    • மொத்தம் ரூ.36 லட்சத்து 32 ஆயிரத்து 343-க்கு விற்பனையானது.

    எழுமாத்தூர்:

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது. இதில் 994 மூட்டைகள் கொண்ட 45 ஆயிரத்து 525 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பில் முதல் தரபருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.78.90 காசுகள், அதிகபட்ச விலை யாக ரூ.89.25 காசுகள், சராசரி விலையாக ரூ.87.42 காசுகள் என்ற விலை களிலும்,

    2-ம்தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.63.35 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.84.01 காசுகள், சராசரி விலையாக ரூ.75.90 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.36 லட்சத்து 32 ஆயிரத்து 343-க்கு விற்பனையானது.

    இதேபோல கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த தேங்காய்கள் மற்றும் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலத்தில் 16 ஆயிரத்து 255 எண்ணிக்கையிலான 5 ஆயிரத்து 797 கிலோ எடையுள்ள தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.22 .88 காசுகள்,

    அதிகபட்ச விலையாகரூ 29. 60 காசுகள், சராசரி விலையாக ரூ.27.10 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 479-க்கு விற்பனையானது.

    இதனையடுத்து நடந்த தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலத்தில் 765 மூட்டைகள் கொண்ட 36 ஆயிரத்து 349 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பி்ல் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.78.99 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.86.49 காசுகள், சராசரி விலையாக ரூ.85.89 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.64.68 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.84.36 காசுகள், சராசரி விலையாக ரூ.80.89 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.28 லட்சத்து 95 ஆயிரத்து 671-க்கு விற்பனையானது.

    மொத்தம் எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் சேர்த்து தேங்காய்கள், தேங்காய் பருப்பு ரூ.66 லட்சத்து 70 ஆயிரத்து 493-க்கு விற்பனையானது.

    • சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 799-க்கு விற்பனையானது.

    சிவகிரி:

    சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொண்ட 2 ஆயிரத்து 923 கிலோ எடையுள்ள எள் விற்பனையானது.

    விற்பனையான எள்ளில் சிவப்பு ரக எள் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.130.59 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.169.39 காசுகள், சராசரி விலையாக ரூ.161.99 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 799-க்கு விற்பனையானது.

    இதேபோல அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலத்தில் 166 மூட்டைகள் கொண்ட 7 ஆயிரத்து 591 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.85.69 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.86.88 காசுகள், சராசரி விலையாக ரூ.86.5 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலை யாக ரூ.63.69 காசுகள், அதிக பட்ச விலையாக ரூ.82.89 காசுகள், சராசரி விலையாக ரூ.72.90 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்து 792-க்கு விற்பனையானது.

    மொத்தம் சிவகிரி மற்றும் அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் எள் மற்றும் தேங்காய்பருப்பு சேர்த்து ரூ.10 லட்சத்து 39 ஆயிரத்து 591-க்கு விற்பனையானது.

    ×