search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலுங்கானா கனமழை"

    • தெலுங்கானா மாநிலத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • இதனால் தெலுங்கானாவில் நாளை, நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஐதராபாத்:

    இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    இதற்கிடையே, கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதன்படி தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத், ரங்கா ரெட்டி, மேட்சல், விகாராபாத், சங்கரெட்டி, மேடக், காமரெட்டி, மெஹபூப்நகர், நாகர்கர்னோல், சித்திபேட், ஜங்கான், ராஜண்ணா சிர்சில்லா மற்றும் கரீம்நகர் ஆகிய இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் ஜூலை 27-ம் தேதி வரை தெலுங்கானாவில் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் ஐதராபாத்துக்கு நாளையும், நாளை மறுநாளும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தெலுங்கானாவில் மாநிலம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுதினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×