என் மலர்
நீங்கள் தேடியது "தெய்வி முருகன் கோவில்"
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- மேல்சாந்திகள், நிர்வாகிகள், மகளிர் மன்றத்தினர், ஊர் பொது மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
என்.ஜி.ஓ.காலனி :
நாகர்கோவில் அருகே உள்ள பெருவிளை தெய்வி முருகன் கோவிலில் 54-ம் ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த (13-ந்தேதி) தொடங்கி இன்று (19-ந்தேதி) வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.
கந்த சஷ்டி விழாவின் 6-ம் நாளான நேற்று (18-ந் தேதி) காலை 6.30 மணிக்கு உதயகால பூஜையும், 11 மணிக்கு கும்பாபிஷேகமும், பகல் 12 மணிக்கு பெரு விளை சொக்கநாதர் ஆலயத்தில் அன்னை ஆதிபராசக்தியிடமிருந்து முருகக்கடவுள் சக்திவேல் வாங்கி வருதல் நிகழ்ச்சியும், பகல் 1 மணிக்கு தெய்வி முருகன் சூரசம்ஹாரத்திற்கு புறப்படுதல் நிகழ்ச்சியும், யானை ஊர்வலமும் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து கேரள புகழ் மைலேந்திரகாவு சிங்காரி மேளமும், டிஜிட்டல் வே ஷங்கள் கலந்த வண்ண நிகழ்ச்சிகளும், மாலை 6.30 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இரவு 7 மணிக்கு மாபெரும் வண்ண நிகழ்ச்சிகளும், 8.30 மணிக்கு நடைபெற்ற போட்டி சிலம்பம் நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் ஐ. கேட்சன் தலைமை தாங்கி னார். போட்டிச் சிலம்பம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
7-ம் திருவிழாவான இன்று (19-ந்தேதி) திருக் கல்யாண விழா கொண்டா டப்பட்டது. நிகழ்ச்சியில் காலை 7 மணிக்கு பொங்க லிடுதலும், 11 மணிக்கு அன்னாபிஷேகமும், பகல் 12 மணிக்கு திருக்கல்யா ணமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 1 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு 1008 சகஸ்ர நாம அர்ச்சனை புஷ்பாபிஷே கமும், மாலையில் சாயங் கால பூஜையும், அதனைத் தொடர்ந்து மணக்கோல முருகனாக உரு காப்பு நிகழ்ச்சியும், பரிசு வழங்கு தல் நிகழ்ச்சியும், இரவு 8.30 மணிக்கு நிறைவு தீபாராத னையும், 8.45 மணிக்கு மணி மகுடம் என்ற சமூக நாடக மும் நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடு களை கவுரவ தலைவர் மாசானமுத்து, சட்ட ஆலோசகர் செல்வகுமார், தலைவர் வெற்றிவேலன், செயலாளர் ராஜபூபதி, பொருளாளர் சிவராஜ், சிறுவர் பக்த சங்க கவுரவத் தலைவர் எம். அருள்குமரன், உபத்தலைவர் ராதா கிருஷ்ணன், இணைச் செய லாளர்கள் ரெங்கராஜ், அழகேசன், அழகுவேல் முருகன், மண்டப பொறுப் பாளர் செந்தில் என்ற அய்யப்பன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மேல்சாந்திகள், நிர்வாகிகள், மகளிர் மன்றத்தினர், ஊர் பொது மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.






