search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென் இந்திய கல்லூரி கூடைப்பந்து"

    தென் இந்திய அழைப்பு கல்லூரி கூடைப்பந்து போட்டியில் கேரள மாநிலம் சங்கனாச்சேரியை சேர்ந்த எஸ்.பி. கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது. #SouthIndianCollegeBasketball
    சென்னை:

    மகேந்திரன் நினைவு விளையாட்டு கிளப் சார்பில் ஐ.எம்.ஏ. ஜூவல்ஸ் நிறுவன ஆதரவுடன் கே.விஸ்வநாதன் நினைவு கோப்பைக்கான தென் இந்திய அழைப்பு கல்லூரி கூடைப்பந்து போட்டி நுங்கம்பாக்கம் மாநகராட்சி திடலில் நடந்தது.

    இதில் கேரள மாநிலம் சங்கனாச்சேரியை சேர்ந்த எஸ்.பி. கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் 74-66 என்ற கணக்கில் ஜெயின் பல்கலைக்கழகத்தை (பெங்களூர்) வீழ்த்தியது. லயோலா கல்லூரி 2-வது இடத்தையும் ஜெயின் பல்கலைக்கழகம் 3-வது இடத்தையும், எம்.சி.சி. 4-வது இடத்தையும் பிடித்தன.

    ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரி முதன்மை கமி‌ஷனர் சி.பி.ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். முன்னார் சர்வதேச வீரர் குலாம் அப்பாஸ், போட்டி அமைப்பாளர் எஸ்.எஸ்.நிசார் உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர். #SouthIndianCollegeBasketball
    12 அணிகள் பங்கேற்கும் தென் இந்திய கல்லூரிகளுக்கான போட்டி நாளை சென்னையில் தொடங்குகிறது.
    சென்னை:

    மகேந்திரன் நினைவு ஸ்போர்ட்ஸ கிளப் சார்பில் ஐ.எம்.ஏ. ஜுவல்ஸ் (பெங்களூர்) ஆதரவுடன் கே.விஸ்வநாதன் நினைவு கோப்பைக்கான தென் இந்திய கல்லூரிகள் இடையேயான அழைப்பு கூடைப்பந்து போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

    இந்தப் போட்டி நாளை (15-ந்தேதி) முதல் 21-ந்தேதி வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடக்கிறது.

    சத்யபாமா, இந்துஸ்தான், லயோலா, எம்.சி.சி., ஜெய்ன்பல்கலைக்கழகம், என்.ஐ.டி.டி.சி. (மங்களூர்), எஸ்பி. கல்லூரி (கேரளா) உள்பட 12 கல்லூரிகள் இதில் பங்கேற்கின்றன. ‘லீக்‘ மற்றும் சூப்பர் லீக் முறையில் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.1 லட்சமாகும்.

    நாளை மாலை 6 மணிக்கு இந்தப் போட்டியை சுங்க இலாகா தலைமை கமி‌ஷனர் எம்.அஜித்குமார் தொடங்கி வைக்கிறார். மேற்கண்ட தகவலை போட்டி ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ். நிசார் தெரிவித்துள்ளார். #tamilnews
    ×