search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென் இந்திய கல்லூரிகளுக்கான கூடைப்பந்து போட்டி- சென்னையில் நாளை தொடக்கம்
    X

    தென் இந்திய கல்லூரிகளுக்கான கூடைப்பந்து போட்டி- சென்னையில் நாளை தொடக்கம்

    12 அணிகள் பங்கேற்கும் தென் இந்திய கல்லூரிகளுக்கான போட்டி நாளை சென்னையில் தொடங்குகிறது.
    சென்னை:

    மகேந்திரன் நினைவு ஸ்போர்ட்ஸ கிளப் சார்பில் ஐ.எம்.ஏ. ஜுவல்ஸ் (பெங்களூர்) ஆதரவுடன் கே.விஸ்வநாதன் நினைவு கோப்பைக்கான தென் இந்திய கல்லூரிகள் இடையேயான அழைப்பு கூடைப்பந்து போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

    இந்தப் போட்டி நாளை (15-ந்தேதி) முதல் 21-ந்தேதி வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடக்கிறது.

    சத்யபாமா, இந்துஸ்தான், லயோலா, எம்.சி.சி., ஜெய்ன்பல்கலைக்கழகம், என்.ஐ.டி.டி.சி. (மங்களூர்), எஸ்பி. கல்லூரி (கேரளா) உள்பட 12 கல்லூரிகள் இதில் பங்கேற்கின்றன. ‘லீக்‘ மற்றும் சூப்பர் லீக் முறையில் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.1 லட்சமாகும்.

    நாளை மாலை 6 மணிக்கு இந்தப் போட்டியை சுங்க இலாகா தலைமை கமி‌ஷனர் எம்.அஜித்குமார் தொடங்கி வைக்கிறார். மேற்கண்ட தகவலை போட்டி ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ். நிசார் தெரிவித்துள்ளார். #tamilnews
    Next Story
    ×