search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீயணைப்புத்துறையினர்"

    • தற்கொலைக்கு முயன்ற மனைவியை கிணற்றில் குதித்த ராணுவவீரர் காப்பாற்றினார்.
    • சாத்தூர் தீய–ணைப் புத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்த–னர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள சின்னத்தம்பியாபுரம் கிரா மத்தை சேர்ந்தவர் சுந்தர மூர்த்தி (வயது 32). இவருக் கும் அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுமணி (27) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திரு மணம் நடைபெற்றது.

    சுந்தரமூர்த்தி இந்திய ராணுவத்தில் ஜம்பு பகுதி யில் பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு பிறகு கண வன், மனைவி இருவரும் ஜம்முவில் குடியேறி வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சுந்தர மூர்த்தி தன்னுடைய மனை வியுடன் கடந்த சில தினங்க ளுக்கு முன்பு விடுமுறை யில் சொந்த ஊருக்கு வந்தி ருந்தார். இந்த நிலையில் ராணுவ வீரர் சுந்தரமூர்த் திக்கும் அவருடைய மனைவி பொன்னு மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொன்னுமணி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றார்.

    பின்னர் அவர் ஊருக்கு வெளியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக சுந்தரமூர்த்திக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சுந்தரமூர்த்தி மனைவியை காப்பாற்ற தானும் கிணற் றில் குதித்தார்.

    தண்ணீரில் மூழ்கிய மனைவியின் தலைமுடியை பிடித்து இழுத்து காப்பாற் றிய பின்னரே, கிணற்றில் படிகள் இல்லாததை சுந்தர–மூர்த்தி அறிந்தார். பின்னர் தொடர்ந்து சப்தம் எழுப்பி அக்கம்பக்கத்தினரை உத–விக்கு அழைத்தார். அவர் கள் கொடுத்த தகவலின் பேரில் சாத்தூர் தீய–ணைப் புத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்த–னர்.

    ×