search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமந்திரம்"

    • திருமூலரின் மகிமை மிகுந்த இடம் காட்டுமன்னார் கோவில் அருகிலிருக்கும் திருநாரையூர்.
    • திருமாளிகைத் தேவர் பல அற்புதங்களை நிகழ்த்திய தலமும் இதுவாகும்.

    திருமூலரின் மகிமை மிகுந்த இடம் காட்டுமன்னார் கோவில் அருகிலிருக்கும் திருநாரையூர்.

    அங்குள்ள பொள்ளாப் பிள்ளையார் கோவிலில் திருமூலர் சந்நிதானம் என இவருக்குத் தனிச் சந்நிதி உள்ளது.

    திருவாவடுதுறைக்கு அருகே ஆடுதுறையிலிருந்து சில கி.மீ தொலைவில் உள்ள ஊர் சாத்தனூர்.

    மாடுமேய்க்கும் மூலன் என்பவனின் உடலுக்குள் அவர் கூடு விட்டு கூடு பாய்ந்த இடமே சாத்தனூர்.

    அங்கு திருமூலருக்குத் தனியே கோவிலுள்ளது.

    பிற்காலத்தில் வந்த சேக்கிழார் பெருமான் அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றித் தான் எழுதிய பெரிய புராணத்தில் திருமூலரை நாற்பத்து ஆறாவதாகச் சேர்த்து, திருமூலரின் வாழ்க்கை வரலாற்றையும், திருமந்திரப் பாடல்களின் குறிப்பையும் எழுதி வைத்தார்.

    அவருக்குப் பின் வந்த நம்பியாண்டார் நம்பி, சைவ சான்றோர்கள் பலர் அருளியிருந்த சைவத் திருமுறைகளை ஒன்றாகத் தொகுத்த போது, திருமூலர் அருளிய திருமந்திரத்தையும் பத்தாவது திருமுறையாகத் தொகுத்து அருளினார்.

    திருமாளிகைத் தேவர் பல அற்புதங்களை நிகழ்த்திய தலமும் இதுவாகும்.

    தேமான் பெருமாள் விக்கிரமபாண்டியன் போன்றோர் அருள்பெற்றதும் ஆவடுதண் துறையே.

    முசுகுந்த சக்கரவர்த்திக்கு ஈசன் மகப்பேறு அருளி இத்தலத்தில் திருவாரூர் காட்சியைக் காட்டியதாகத் தலபுராணம் உரைக்கின்றது.

    தரும தேவதை இடபமாக ஈசனைத்தாங்கும் பேறு பெற்ற தலம் இதுவாகும்.

    திருமூலர், திருமாளிகைத் தேவர் ஆகியோரின் அதிட்டானங்கள் இங்குதான் திகழ்கின்றன.

    • திருமூலர் புரட்டாசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர் என போகரின் சப்த காண்டத்தில் குறிப்புள்ளது.
    • அங்குள்ள ஆதிமூலர் சந்நிதியே அவர் ‘ஒளி ஐக்கியம்‘ ஆன ஜீவ பீடம்!

    திருமூலர் புரட்டாசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர் என போகரின் சப்த காண்டத்தில் குறிப்புள்ளது.

    இவர் நந்தீஸ்வரரிடம் உபதேசம் பெற்றதும் முக்தி எய்தியதும் மூலநட்சத்திரம் எனவும் இந்நூல் குறிக்கின்றது.

    சில சித்தர் பாடல்களில் இவர் வேளாளர் மரபு என்னும் குறிப்பு உள்ளது. சில பாடல்கள் ஆயர்குலத்தவர் எனக் குறிக்கின்றன.

    ஓர் இளவயது அரசன் அகால மரணம் அடைவதால், அவன் மனைவியும் சுற்றத்தாரும் அழுது புலம்ப, திருமூலர் தன் உயிரை இறந்த அரசனின் உடலில் புகுத்தி எழுந்தார் என 'வைத்திய ரத்தினச் சுருக்கம்' என்னும் சித்தர் நூலில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது.

    மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து மூவாயிரம் திருமந்திரப் பாடல்களை தமிழுக்கும், சைவத்துக்கும், சித்தர் உலகுக்கும் முச்சிறப்பாய் அளித்த திருமூலர், ஜீவ ஐக்கியம் பெற்ற ஸ்தலம் சிதம்பரம்.

    அங்குள்ள ஆதிமூலர் சந்நிதியே அவர் 'ஒளி ஐக்கியம்' ஆன ஜீவ பீடம்!

    • இது சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் அனைத்திற்கும் முற்பட்டது.
    • திருமூலர் சிவபெருமானை போற்றப் பாடியருளிய திருமந்திரம், வேத ஆதமங்களின் சாரம்.

    திருமூல நாயனார் பரம் பொருளாகிய சிவபெருமானை போற்றப் பாடியருளிய திருமந்திரம், வேத ஆதமங்களின் சாரம்.

    இது பாசுரம் தவிர்த்து ஒன்பது தந்திரங்களாக அமைந்துள்ளது பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக தெய்வீக ஆற்றலுடன் விளங்குவது இந்தத் திருமந்திரம்.

    இது சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் அனைத்திற்கும் முற்பட்டது.

    இந்த மூவாயிரம் திருமந்திரப் பாடல்களையும் அதிகாலையில் எழுந்து அவற்றின் பொருள் உணர்ந்து ஓதுவோர், பிறவிப் பாசம் நீங்கி இறைவனை அடைவர் என்பது திருமூலரின் திருவாக்கு.

    இவ்வாறு, உலகோர் உய்யும் பொருட்டுத் திருமந்திர மாலையை அருளியபின் திருமூலர் சிதம்பரம் சென்று தனது குருவாகிய நந்தியிடம் தஞ்சம் அடைந்து தில்லை நாதனுடன் கலந்து விட்டார்.

    • பழைய கணபதியின் தொப்பை இல்லாத திருஉருவம் ஒன்று திருவாரூர் தியாகேசர் ஆலயத்திலும்
    • மற்றொன்று இங்கிலாந்தில் இருக்கும் அருங்காட்சியகத்திலும் இன்றும் இருப்பதைக் காணலாம்.

    திருமந்திரத்தில் "ஐந்து கரத்தினை" என்று தொடங்கும் விநாயகர் வணக்கப் பாடல், தற்காலத்தில் தான் திருமூலரின் திருமந்திரம் நூலில் சேர்க்கப்பட்டது.

    அவர் காலத்தில் சைவ சமயத்தில், சிவனை அன்றி வேறொரு தெய்வத்தை வைத்து எந்தவொரு காரியங்களையும், இலக்கியங்களையும், அல்லது நூல்களையும் தொடங்கியது இல்லை.

    விநாயகரின் வழிபாடு பிற்காலத்தில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான, சிறுத்தொண்டர் என்று போற்றப்படுகிற பரஞ்சோசியத்திலே அவர்கள் வணங்கும் தெய்வமாகிய கணபதியைத் தமிழகத்துக்கு தான் திரும்பும்பொழுது கொண்டு வந்தார் என்பதும், அப்பொழுது விநாயகரின் வயிற்றுப் பகுதி இன்று இருப்பது போல தொந்தியாக இல்லாமல் தட்டையாக இருந்தது என்பதும் வரலாறு.

    இந்த வரலாற்றுக்கு சான்றாக, பழைய கணபதியின் தொப்பை இல்லாத திருஉருவம் ஒன்று திருவாரூர் தியாகேசர் ஆலயத்திலும், மற்றொன்று இங்கிலாந்தில் இருக்கும் அருங்காட்சியகத்திலும் இன்றும் இருப்பதைக் காணலாம்.

    • சைவ சித்தாந்தம் வரித்துக் கொண்ட சித்தர் நூல் என்றும் அதைக் குறிப்பிடலாம்.
    • இவை ‘திருமந்திரம்‘ என்னும் தீந்தமிழ்க் கடலின் ஒரு சில தேன்துளிகள்!

    திருமூலரின் 'திருமந்திரம்' சிறப்புப்பாயிரம், பொதுப்பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் என்னும் மூன்று பாயிரங்களையும் ஒன்பது தந்திரங்களையும் கொண்டுள்ளது.

    பாடல்களின் தொகை மூவாயிரம் என சேக்கிழார் குறித்துள்ளார்.

    எனினும் இராமலிங்க வள்ளலார் குருமந்திரப் பாடல் தொகை எட்டாயிரம் எனக் குறிப்பிடுகிறார்.

    வேறு சில சித்தர் நூல்களிலும் இத்தொகைக் குறிப்பே காணப்படுகிறது.

    தனித்துவமான கருத்துகளை, உட்பொருளைக் கொண்ட திருமந்திரத்தை சைவ சித்தாந்தத்தின் மூலம் எனச் சொல்லலாம்.

    சைவ சித்தாந்தம் வரித்துக் கொண்ட சித்தர் நூல் என்றும் அதைக் குறிப்பிடலாம்.

    மந்திரங்கள், சமா திக்கிரியைப் போன்ற நுட்பமான கருத்துகள் மட்டுமன்றி தமிழிலக்கியத்துக்குப் பெருமை சேர்ப்பவையாக புகழ்பெற்றுள்ளன, சமூகக் கருத்துகள் கொண்ட பல திருமந்திரப் பாடல்கள்

    'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' (நான் பெற்ற இன்பம் இவ்வுலகமும் பெறட்டும்)

    'யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே' (பிறர் மனம் புண்படாத இன்சொற்களைப் பேசுங்கள்)

    'அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே' (பேரன்பு காட்டும் ஜீவாத்மாக்கள் சிவனுடன் ஒன்றி விடுகின்றனர்.)

    'உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்' (மனித உடம்பு ஓர் ஆலயம். அதனுள்ளே இறைவன் உறையும் கருவறையே மனித உள்ளம்)

    'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' (மனிதர்கள் என்னும் ஒரே குலம்தான் உள்ளது! எல்லாம் வல்ல பரம்பொருள் ஒன்றே தெய்வம்)

    இவை 'திருமந்திரம்' என்னும் தீந்தமிழ்க் கடலின் ஒரு சில தேன்துளிகள்!

    • அவ்வாறே இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டார் திருமூலர்.
    • ஆண்டுக்கு ஒருமுறை கண் விழித்து ஒரு பாடல் எழுதிவிட்டு மீண்டும் தியானத்தில் இருப்பார்.

    தில்லைத் திருநடனங் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டு காவிரியில் நீராடி அதன் தெற்கு கரையினை அடைந்து, உமையம்மையார் பசுக்கன்றின் வடிவில் இறைவனை நோக்கித்தவம் செய்து, அத்தவத்தால் மகிழ்ந்த இறைவனார் இறங்கி வந்து அம்மையை அனைத்து எழுந்து இருவரும் திருமணக் கோலத்தில் அருள்புரியும் திருத்தலமான திருவாவடுதுறையை அடைந்தார்.

    திருவாவடுதுறையில் உள்ள கோமுத்தீஸ்வரர் ஆலய இறைவனை வழிபட்டு விட்டுத் திரும்பச் செல்லும் போது, காவிரிக்கரையில் ஓர் இடத்தில் பசுக் கூட்டங்கள் கதறி அழுவதைக் கண்டார்.

    அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே பசுக்கனை மேய்க்கும் இடையர் குலத்தில் பிறந்த மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றி வந்து வருந்திக் கண்ணீர் விட்டன.

    பசுக்களின் துயர் கண்டு மனம் இறங்கிய சிவயோகியார் அவற்றின் துன்பம் துடைக்க எண்ணினார்.

    எனவே, தம்முடைய உடலை மறைவான இடத்தில் பாதுகாப்பாக வைத்து விட்டு, கூடுவிட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் முறையில் தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் செலுத்தினார். இறந்து கிடந்த மூலன் உறக்கத்தில் இருந்தவன் போல சட்டென்று கண் விழித்து திருமூலராய் எழுந்தார்.

    மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்களின் களிப்பைக் கண்டு மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார்.

    வயிராற மேய்ந்த பசுக்கள், காவிரியாற்றின் நீர்த் துறையிலே இறங்கித் தண்ணீர் பருகிவிட்டு கரையேறி, அவற்றின் தினசரி வழக்கப்படி அவற்றின் ஊரான சாத்தனூரை நோக்கி நடக்க ஆரம்பித்தன.

    அவற்றைத் தொடர்ந்து சென்ற திருமூலர், பசுக்கள் தத்தம் வீடுகளுக்கு சென்றதை கண்டார்.

    அதே சமயம் வீட்டில் இருந்து வெளியே வந்த மூலவனின் மனைவி, மூலவன் வடிவிலிருந்த திருமூலரைத் தம் வீட்டிற்கு அழைத்தாள்.

    திருமூலரோ, தான் அவளுடைய கணவன் அல்ல என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார்.

    அதைக்கேட்டு வியப்புற்ற அவள், தன் கணவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று அந்த ஊரில் உள்ள பெரியவர்களிடம் சென்று முறையிட்டாள்.

    ஊர் பெரியவர்கள் வந்து விசாரிக்க திருமூலர் தான் ஏற்றிருந்த மூலவனின் உடலில் இருந்து உயிர் விலகி ஒரு இறந்த ஆட்டின் உடலில் சென்று தாம் ஒரு சிவயோகியார் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டு, மறுபடியும் மூலவனின் உடலில் புகுந்தார்.

    இந்த அதிசயத்தை கண்ட அந்த ஊர் பெரியவர்கள், மூலவனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.

    அனைவரும் கலைந்து சென்றபின், திருமூலவர் தாம் மறைவான இடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த தமது திருமேனியைத் தேடினார்.

    அது அங்கு இல்லாததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தவர், பின்பு யோக நிலையில் அமர்ந்து தனது மேனியைப் பற்றிய உண்மையை உணர முயன்றார்.

    இறைவன் அருளிய வேத ஆகமப் பொருள்களைத் தமிழிலேயே வகுத்து உலகோர்க்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக இறைவன் தம் உடலை மறைத்து அருளி உள்ளார் என்பதை உணர்ந்து கொண்டார்.

    அவ்வாறே இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டார் திருமூலர்.

    சாத்தனூரில் இருந்து புறப்பட்ட திருமூலர், மீண்டும் திருவாவடுதுறையில் உள்ள கோமுத்தீஸ்வரர் ஆலயத்தை அடைந்து, மூலவர் பெருமானை பணிந்துவிட்டு, கோவிலுக்கு வெளியே அமைந்துள்ள அரச மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார்.

    ஆண்டுக்கு ஒருமுறை கண் விழித்து ஒரு பாடல் எழுதிவிட்டு மீண்டும் தியானத்தில் இருப்பார்.

    இவ்வாறாக மூவாயிரம் ஆண்டுகள் தியானம் செய்து, உலகோர் பிறவித் துன்பத்தில் இருந்து நீங்கி உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளையும் வகுத்தும், தொகுத்தும், விரித்தும் மூவாயிரம் பாடல்களாக வழங்கினார்.

    இந்த மூவாயிரம் பாடல்கள் முதலில் "தமிழ் மூவாயிரம்" என்ற பெயரிலேயே வழங்கப்பட்டது.

    பிற்காலத்தில் வந்த சான்றோர்கள், திருமந்திரத்தில் நிரம்பி இருந்த மந்திரங்களும், சில தந்திரங்களும், மனித ஸ்தூல சரீரத்துக்கு தேவையான எல்லாவற்றையும் விளக்கி உள்ளபடியால், அதை திருமூலர் அருளிய திருமந்திரம் என்று மாற்றி வைத்தார்கள்.

    ×