search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமங்கலம் அருகே செயின் பறிப்பு"

    ஆலம்பட்டி பஸ் நிறுத்தத்தில் கணவருடன் நின்ற பெண்ணிடம் 2 பவுன் செயினை வழிப்பறி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள பத்தன்யாபுரம், சாமிக்கண்ணு தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது 60). இவர் நேற்று இரவு மனைவியுடன் வெளியூர் செல்வதற்காக ஆலம்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது 3 வாலிபர்கள் சுற்றி வளைத்து முத்து மனைவி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச்செயினை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர். இதில் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கதறிய அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இது தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசில் முத்து புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் பாண்டியராஜ் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை தேடி வருகிறார். #Tamilnews
    ×