search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருத்தணி வெயில்"

    கோடை காலம் முடிந்து வடகிழக்கு பருவ மழை தொடங்கும் நிலையில் திருத்தணியில் 103 டிகிரி வெயில் மீண்டும் கொளுத்த தொடங்கி இருக்கிறது. #summer

    சென்னை:

    கோடை காலத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பு தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் கொளுத்த தொடங்கியது.

    100 டிகிரி வெயில் அடித்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    அக்னி தொடங்கிய பிறகு தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. 100 டிகிரிக்கு மேல் சென்றதால் மக்கள் வெளியில் நடமாடவே அஞ்சினர். அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகு வெயிலின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

    அதன் பிறகு தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் குமரி, நெல்லை, கோவை, நீலகரி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்தது.

    இதனால் வெப்பம் குறைந்து அம்மாவட்டங்களில் குளிர்ச்சியான சீதோ‌ஷன நிலை நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும் மழை பெய்தது. சென்னையில் மாலை வேளையில் பெய்தது.

    கோடை காலம் முடிந்து வடகிழக்கு பருவ மழை தொடங்கும் நிலையில் சென்னை, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் வெயில் மீண்டும் கொளுத்த தொடங்கி இருக்கிறது.

    திருத்தணியில் நேற்று 103 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. நாகையில் 101 டிகிரியும், கடலூர், மற்றும் மதுரை விமான நிலையத்தில் தலா 100 டிகிரியும், சென்னை, வேலூர், திருச்சியில் தலா 99 டிகிரியும் பதிவானது.

    தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட இடங்களில் வெயிலின் வெப்பம் அதிகரித்துள்ளதால் மக்கள் மழையை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    இதற்கிடையே வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என்றும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறி உள்ளது.  #summer

    ×