என் மலர்
நீங்கள் தேடியது "தமிழ்ப் படம்"
- குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் வன்முறையை மிகவும் நுணுக்கமாகவும், வேகத்துடனும், அதேசமயம் வெறுமைக்கும் ஆறுதலுக்கும் இடையே ஊசலாடும் உணர்வுகளையும் இப்படம் காட்டுகிறது.
- அறிமுக தமிழ் இயக்குநரின் திரைப்படம் பெர்லினேல் மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை.
76வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் ஃபோரம் பிரிவில் 'சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்' என்ற தமிழ் திரைப்படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஆர். கௌதம் இயக்கியுள்ளார், தமிழரசன் காளிதாஸ் தயாரித்துள்ளார். கூழாங்கல் படத்தில் நடித்த கருத்தடையான், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அறிமுக தமிழ் இயக்குநரின் திரைப்படம் பெர்லினேல் மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை. மணிரத்னத்தின் அலைபாயுதே (2001), அமீரின் பருத்திவீரன் (2008) மற்றும் பி.எஸ். வினோத்ராஜின் கொட்டுக்காளி (2024) ஆகியவற்றைத் தொடர்ந்து, மதிப்புமிக்க பிரிவில் திரையிடப்படும் நான்காவது தமிழ் திரைப்படம் இதுவாகும்.
பெர்லினேல் தேர்வுக்குழு படம் குறித்து கூறியதாவது;
"ஒரு இளைஞன் மரணமடைகிறான். ஈமச்சடங்குகள் நடக்கின்றன; ஆனால் துக்கம் அந்தளவுக்கு இல்லை. அந்த மரணம் பல விஷயங்களை உலுக்கி மாற்றுகிறது. குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் வன்முறையை மிகவும் நுணுக்கமாகவும், வேகத்துடனும், அதேசமயம் வெறுமைக்கும் ஆறுதலுக்கும் இடையே ஊசலாடும் உணர்வுகளையும் இப்படம் காட்டுகிறது. என்ன ஒரு அற்புதமான அறிமுகத் திரைப்படம்!" எனக் குறிப்பிட்டுள்ளது.

பெர்லின் திரைப்பட விழாவில் படம் தேர்வானது குறித்து பேசியுள்ள இயக்குநர் ஆர்.கௌதம்,
"2025-இல் தொடங்கி, மிகக் குறுகிய காலத்தில், குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது எனக்குப் பெருமிதம் அளிக்கிறது. என்னைப்போன்ற ஒரு அறிமுக இயக்குநரின் முதல் படமே தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது, தற்போது தமிழ்நாட்டில் செழித்து வரும் துடிப்பான கலைச் சூழலைப் பிரதிபலிக்கிறது. அலைபாயுதே, பருத்திவீரன் மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்களின் வரிசையில் எனது படமும் இடம்பெற்றிருப்பது, தெற்காசியாவிலிருந்து உலக மேடைக்கான தமிழ் சினிமாவின் பயணம் ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக மாறி வருவதைக் காட்டுகிறது" என தெரிவித்துள்ளார்.
76வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 22 வரை நடைபெறுகிறது.
- தியானத்தை நினைவூட்டும் வகையில் இருக்கும்.
- தியான காட்சியின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான படங்களை இயக்கி புகழ் பெற்றவர் சி.எஸ். அமுதன். இவர் இயக்கத்தில் வெளியான தமிழ்ப் படம், தமிழ்ப் படம் 2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதைத் தொடர்ந்து இவர் இயக்கிய ரத்தம் என்ற படம் கடந்த ஆண்டு வெளியானது.
இவர் இயக்கிய தமிழ்ப் படம் படத்தின் கதை, தமிழ் திரையுலகில் வெளியான திரைப்படங்களை கிண்டல் செய்யும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில், தமிழ்ப் படம் 2 ஆம் பாகத்தில் இடம்பெற்ற காட்சியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மேற்கொண்ட தியானத்தை நினைவூட்டும் வகையில் இருக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் பயணமாக கன்னியாகுமரி வந்துள்ள நிலையில், அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் அவர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். பிரதமர் மோடி தியானம் செய்ய தமிழகம் வந்துள்ள சூழலில், இயக்குநர் சி.எஸ். அமுதன் தனது எக்ஸ் தளத்தில் தமிழ்ப் படம் 2-வில் இடம்பெற்ற தியான காட்சியின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், நடிகர் மிர்ச்சி சிவா சமாதி ஒன்றில் அமர்ந்து தியானம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து தியானத்தை முடித்துக் கொள்ளும் சிவா, பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விக்கு கிண்டலாக பதில் அளிப்பார்.
இவரது பதிவிற்கு பதில் அளித்துள்ள நெட்டிசன்களில் பலர், இவருக்கு நக்கல் இருப்பதாகவும், சரியான நேரத்தில் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், சிலர் தமிழ் படம் 3 ஆம் பாகத்திற்கான குறியீடா? என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப் படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.
- 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப் படம் 2 ஓரளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெற்றது.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான படங்களை இயக்கி புகழ் பெற்றவர் சி.எஸ். அமுதன். இவர் இயக்கத்தில் நடிகர் சிவா நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப் படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.
இதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு இதே கூட்டணியில் உருவான தமிழ்ப் படம் 2 ஓரளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெற்றது.
'தமிழ்ப் படம்' படத்தின் கதை, தமிழ் திரையுலகில் வெளியான திரைப்படங்களை கிண்டல் செய்யும் வகையில் அமைக்கப்பட்டு இருந்ததே அதன் வெற்றிக்கு முக்கிய காரணம்.
இப்படங்களை தொடர்ந்து சி.எஸ். அமுதன் இயக்கிய ரத்தம் என்ற படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், விரைவில் 'தமிழ்படம் 3' உருவாகவுள்ளதாக அப்படத்தின் கதாநாயகன் சிவா உறுதிப்படுத்தியுள்ளார்.
அண்மையில் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்த சிவா, ''தமிழ்ப்படம் 3 குறித்து 'ஒய் நாட்' தயாரிப்பு நிறுவனத்தின் ஸ்ரீகாந்த்திடம் பேசியுள்ளோம். கிட்டத்தட்ட 2 மணிநேரத்திற்கு மேலாக பேசி, 2025ல் தமிழ்ப்படம் 3 எடுக்க முடிவுசெய்துள்ளோம். ஒரு கதை எழுதி படம் பண்ணுவது நார்மல். ஆனால், 100 படங்களை பார்த்து கதை எழுதுவது சவாலான விஷயம்'' என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






