என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தமிழக் கனவு நிகழ்ச்சி"
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேச்சு
- குடியாத்தத்தில் தமிழக் கனவு நிகழ்ச்சி நடந்தது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை திட்டத்தில் மாபெரும் தமிழக் கனவு எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அகமே அழகு என்ற தலைப்பில் திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி, அரை நூற்றாண்டு ஆட்சியும் அசுரவேக வளர்ச்சியும் என்ற தலைப்பில் ஊடகவி யலாளர் செந்தில்வேல் ஆகியோர் உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-
தமிழை கட்டாயமாக நாம் வளர்க்க வேண்டும். தமிழ்மொழி என்பது வரலாற்று கணக்கிட்டு முறைப்படி பார்த்தால் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தமிழ் மொழி பயன்பாட்டில் இருந்தது. தொல்காப்பியர் தமிழை எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என வகைப்படுத்தினார்.
3 ஆயிரம் ஆண்டுக ளுக்கும் முன்பு தமிழை இவ்வாறு வகைப்படுத்தி எழுதுவதற்கு ஒரு நல்ல சிந்தனை இருந்துள்ளது. நமது கனவு என்பது பழமையான, தொன்மை யான தமிழ் மொழியை எத்தனையோ ஆண்டுகளாக எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பில் நாம் இன்றைக்கு உள்ளோம். ஆகவே நாம் கனவு காண வேண்டும்.
தமிழ் மொழியை நாம் கற்க வேண்டும்.தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
அந்த காலத்தில் கல்வெட்டுகளில் எழுதுவது என்பது மிகவும் சிரமமானது. இக்காலகட்டத்தில் பேனா, கரும்பலகை, சாக்பீஸ், அழிப்பான் போன்றவை உள்ளது.ஆனால் அந்த காலத்தில் கல்வெட்டுகளில் எழுதினார்கள்.
அவர்களுக்கு ஒரு கனவு இருந்தது.நமக்கு பின்னால் வரும் தலைமுறையினர் இவற்றை படித்துவிட்டு அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவு இருந்தது.
ஆகவே இந்த கணிப்பொறி காலத்தில் நமக்கும் கனவு வேண்டும். தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்