search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளி வரத்து குறைந்தது"

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்ததால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். இந்த தக்காளிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு நெல்லை, தூத்துக்குடி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, கோவை மற்றும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது கிராமப்பகுதிகளில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வரத்து குறைந்துள்ளது. வடகாடு, பால்கடை, பெத்தேல்புரம், கண்ணனூர், பெரியூர் உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்து மட்டும் தக்காளி வரத்து உள்ளது.

    இதன் காரணமாக ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டுக்கு 700 பெட்டிகள் மட்டுமே வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 14 கிலோ எடை கொண்ட பெட்டி ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    குறைந்த அளவே தக்காளிகள் வந்துள்ளதால் உள்ளூர் வியாபாரிகளே வாங்கி சென்று வருகின்றனர். இதனால் வெளியூர்களுக்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்புத்தாண்டு வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. மேலும் திருவிழாக்களும் உள்ளதால் தக்காளி தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து குறைந்துள்ளதால் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×