search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டுட்டீ சந்த்"

    ஓரினச் சேர்க்கையாளர் என்று தன்னை வெளிப்படையாக அறிவித்த ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த், எனது சகோதரி 25 லட்சம் ரூபாய் கேட்டு என்னை மிரட்டி அடித்தார் என குற்றம்சாட்டியுள்ளார்.
    புவனேஸ்வர்:

    இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த், தான் ஒரு பெண்னை காதலித்து வருவதாக கூறினார். டுட்டீ சந்தின் சொத்துக்களை பறிப்பதற்காக அந்தப்பெண் டுட்டீ சந்தை பலவந்தப்படுத்தி திருமணம் செய்ய மிரட்டி வருவதாக இதுகுறித்து அவரது சகோதரி சரஸ்வதி சந்த், நேற்று கூறியிருந்தார்.



    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இன்று பேட்டியளித்த டுட்டீ சந்த், எனது சகோதரி சரஸ்வதி 25 லட்சம் ரூபாய் கேட்டு என்னை மிரட்டி வருகிறார். இதற்காக ஒருமுறை என்னை அவர் அடித்தார். இதுதொடர்பாக நான் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருக்கிறேன்.

    அவரது மிரட்டல் காரணமாகவே நான் காதலித்துவரும் பெண்ணைப்பற்றி நான் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
    இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த், தான் ஒரு பெண்னை காதலித்து வருவதாக கூறினார். இது குறித்து அவரது சகோதரி சரஸ்வதி சந்த், டுட்டீ சந்தின் சொத்துக்களை பறிக்க பலவந்தப்படுத்தி திருமணம் செய்ய சொல்வதாக கூறியுள்ளார்.
    ஜெய்ப்பூர்:

    இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த் ஆவார். இவர் தனக்கு சில வருடங்களுக்கு முன் அறிமுகமாகிய பெண்ணை, காதலிப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அந்த பெண்ணுடன் இணைந்து எதிர்காலத்தில் வாழப்போவதாகவும் அறிவித்தார்.

    மேலும் தனது இந்த முடிவிற்கு பெற்றோர்களே தடை விதிக்காத நிலையில், சகோதரி கடுமையாக எதிர்ப்பதாகவும் கூறினார். இந்நிலையில் டுட்டீயின் சகோதரி சரஸ்வதி சந்த் இந்த விவகாரம் குறித்து கூறியிருப்பதாவது:

    டுட்டீ இதனை தன் விருப்பப்படி கூறவில்லை. டுட்டீ காதலிப்பதாக கூறிய அந்த பெண்ணும் அவரது குடும்பத்தினரும் திருமணம் செய்யுமாறு அவளை பலவந்தப்படுத்தியும், மிரட்டியும் வந்துள்ளனர். இவை அனைத்தும் டுட்டீயின் சொத்திற்காகவும், அவர்களின் சுயலாபத்திற்காகவும் செய்துள்ளனர்.



    இவர்களால் டுட்டீயின் வாழ்க்கையும், சொத்துக்களும் ஆபத்தில் உள்ளது. எனவே டுட்டீக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென அரசிடம் வலியுறுத்தியுள்ளேன். மேலும் டுட்டீ சிறு பிள்ளை அல்ல. ஒரு ஆணை திருமணம் செய்ய வேண்டுமா, பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமா என்பது குறித்து அவள் தான் தீர்மானிக்க வேண்டும்.

    ஆனால், டுட்டீ இவ்வாறு பேச வேண்டும் என்கிற நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அவளது திருமணம் குறித்த முடிவுகள் பின்னர் ஆலோசிக்கப்படும். டுட்டீயின் வெற்றிக்கு யார் தங்களை காரணம் என கூறுகிறார்களோ, அவர்கள் குற்றவாளிகள்.

    சர்வதேச போட்டிகளில் இருந்து நீக்கி, அவளை பிரச்சனைகளில் சிக்க வைக்க ஏற்படுத்தப்பட்ட சதி. இந்த விவகாரத்தால் வரும் 2020ம் ஆண்டு  நடைபெறும் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கவனம் செலுத்த முடியாது.  அரசின் அனைத்து துறைகளும் அவளது வெற்றிக்காக ஊக்கப்படுத்தி வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ‘நான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர்’ என்று தடகள வீராங்கனை டுட்டீ சந்த் பகிரங்கமாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11.24 வினாடிகளில் இலக்கை கடந்து தேசிய சாதனையாளராக வலம் வருகிறார். கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டம் இரண்டிலும் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். ஒடிசாவைச் சேர்ந்த 23 வயதான டுட்டீ சந்த், சில ஆண்டுகளுக்கு முன்பு பாலின பிரச்சினையில் சிக்கினார். அதாவது அவரிடம் ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக கூறி தடகளத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு விளையாட்டுக்கான கோர்ட்டில் அப்பீல் செய்து சாதகமான தீர்ப்பை பெற்றார்.

    இந்த நிலையில் அவர், தான் ஒரு ஓரினசேர்க்கையாளர் என்ற தகவலை வெளியிட்டு இப்போது புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். ‘ஒரே பாலினத்தை விரும்புகிறவர்கள்’ என்று ஒரு சில விளையாட்டு பிரபலங்களே தைரியமாக வெளிஉலகுக்கு சொல்லி இருக்கிறார்கள். அந்த பட்டியலில் டுட்டீ சந்தும் இணைந்துள்ளார்.

    இது குறித்து டுட்டீ சந்த் நேற்று கூறியதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளாக எனது கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறேன். அந்த பெண் புவனேசுவரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் எனக்கு சொந்தக்காரர் தான். அவரது வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் நிறைய நேரத்தை செலவிடுவேன். அவர் தான் எனது உயிர் மூச்சு. எதிர்காலத்தில் அவருடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ விரும்புகிறேன்.

    எனது வீட்டை மூத்த சகோதரி கவனித்து வருகிறார். வீட்டில் அவரது ஆதிக்கம் தான் எப்போதும் இருக்கும். தனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக சகோதரனின் மனைவியை எனது அக்கா வீட்டை விட்டே விரட்டி விட்டு விட்டார். இப்போது அவர் என்னையும் குடும்பத்தில் சேர்க்கமாட்டேன், இங்கிருந்து போய் விடு என்று மிரட்டுகிறார். ஆனால் எனக்கு 18 வயது தாண்டி விட்டது. சட்டப்படி எனது வாழ்க்கையை தீர்மானிக்க எனக்கு முழு உரிமை உண்டு. அதனால் அந்த பெண்ணுடன் வாழப்போவதை வெளிப்படையாக சொல்கிறேன்.

    எனது சகோதரி, நான் தேர்ந்தெடுத்துள்ள வாழ்க்கை துணைக்கு எனது சொத்து மீது தான் ஆசை இருப்பதாக சொல்கிறார். அது மட்டுமின்றி இந்த உறவு நீடிக்கும் பட்சத்தில் என்னை ஜெயிலுக்கு அனுப்பி விடுவேன் என்றும் மிரட்டுகிறார். என்னை பொறுத்தவரை இறுதியாக அவருடன் இருக்கவே விரும்புகிறேன். தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதே எனது லட்சியம். அதற்காக கடின பயிற்சி மேற்கொண்டுள்ளேன்.

    இவ்வாறு டுட்டீ சந்த் கூறினார்.

    தனது பார்ட்னரின் ஒப்புதலுடன் இந்த விஷயத்தை வெளிப்படுத்திய டுட்டீ சந்த் அவரது பெயரை வெளியிட மறுத்து விட்டார்.
    ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று நடைபெற்ற ஆடவர் 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் மற்றும் பெண்கள் 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. #AsianGames2018 #JinsonJohnson
    ஜகர்தா :

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில், ஆடவர்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

    இவர், நிர்ணயிக்கப்பட்ட 1,500 மீட்டர் தூரத்தை 3 நிமிடம் 44.72 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இவருக்கு அடுத்தபடியாக ஈரான் வீரர் அமிர் மொராடி(3 நிமிடம் 45.62 வினாடி) 2-வது இடத்தையும், பக்ரைன் வீரர் முகமது(3 நிமிடம் 45.88 வினாடி) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

    இதைத்தொடர்ந்து, ஹிமா தாஸ், பூவம்மா உள்ளிட்டோரை உள்ளடக்கிய இந்திய மகளிர் அணி, 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்து 13-வது தங்கப் பதக்கத்தை வென்றனர்.

    இன்று மட்டும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 2 தங்கப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இதனால், 13 தங்கம், 20 வெள்ளி, 22 வென்கலப் பதக்கங்களுடன் இந்தியா 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 
    100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற டுட்டீ சந்த்-விற்கு 1.5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் அறிவித்துள்ளார். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற  பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை டுட்டீ சந்த் கலந்து கொண்டார். தகுதிச் சுற்றில் சிறப்பாக ஓடிய டுட்டீ சந்த் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப் போட்டியில் சீனா (2), பஹ்ரைன் (2), கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், மலேசியா ஆகிய வீராங்கனைகளுடன் டுட்டீ சந்த் பதக்கத்திற்கு மல்லு கட்டினார். விசில் ஊதியதும் டுட்டீ சந்த் சிட்டாக பறந்தார். இதனால் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 11.32 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த 2-வது இடம் பிடித்தார்.



    பஹ்ரைன் வீராங்கனை எடிடியோங் ஓடியோங் 11.30 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த தங்கப்பதக்கம் வென்றார். டுட்டீ சந்த் 0.2 வினாடியில் தங்கத்தை பறிகொடுத்தார்.

    இந்நிலையில் வெள்ளி பதக்கம் வென்ற டுட்டீ சந்த்-விற்கு 1.5 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று ஒடிசா முதல் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
    ஆசிய விளையாட்டு போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா வீராங்கனை டுட்டீ சந்த் 11.32 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளி வென்றார். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை டுட்டீ சந்த் கலந்து கொண்டார்.

    தகுதிச் சுற்றில் சிறப்பாக ஓடிய டுட்டீ சந்த் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் சீனா (2), பஹ்ரைன் (2), கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், மலேசியா ஆகிய வீராங்கனைகளுடன் டுட்டீ சந்த் பதக்கத்திற்கு மல்லு கட்டினார்.

    விசில் ஊதியதும் டுட்டீ சந்த் சிட்டாக பறந்தார். இதனால் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 11.32 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த 2-வது இடம் பிடித்தார்.

    பஹ்ரைன் வீராங்கனை எடிடியோங் ஓடியோங் 11.30 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த தங்கப்பதக்கம் வென்றார். டுட்டீ சந்த் 0.2 வினாடியில் தங்கத்தை பறிகொடுத்தார். எடிடியோங் ஓடியோங் அரையிறுதியில் 11.38 வினாடிகளிலும், டுட்டீ சந்த் 11.43 வினாடிகளிலும் பந்தய தூரத்தை கடந்திருந்தனர்.

    சீன வீராங்கனை யோங்லி வெய் 11.33 வினாடிகளில் கடந்த வெண்கலம் வென்றார். இவர் அரையிறுதியில் 11.29 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்திருந்தார்.
    பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் 11.43 வினாடிகளில் கடந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை டுட்டீ சந்த். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை டுட்டீ சந்த் கலந்து கொண்டார்.

    இறுதிப் சுற்றுக்கான அரையிறுதி ஒன்றில் 7 பேருடன் டுட்டீ சந்த் பங்கேற்றார். இவர் 11.43 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து 3-வது இடம்பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதி 2-ல் சீன வீராங்கனை யோங்லி வெய் 11.29 வினாடியில் பந்தைய தூரத்தை கடந்து முதல் இடம்பிடித்தார்.
    கவுஹாத்தியில் நடைபெற்றுவரும் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசா வீராங்கனை டுட்டீ சந்த் 11.29 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனை படைத்தார். #DuteeChand #National100mrecord #InterStateAthleticsChampionships

    கவுஹாத்தி:

    தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கவுகாத்தி நகரில் நடைபெற்று வருகிறது. 

    இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தின் அரையிறுதியில் ஒடிசா வீராங்கனை டுட்டீ சந்த் 11.29 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு அவர் 11.30 வினாடிகளில் இலக்கை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. சொந்த சாதனையை இப்போது முறியடித்து இருக்கிறார்.

    இதன்மூலம் வருகிற ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற உள்ள ஆசிய தடகள போட்டிகளுக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். அதற்கு தகுதிபெற 100 மீட்டர் தூரத்தை 11.67 வினாடிகளில் கடக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. #DuteeChand #National100mrecord #InterStateAthleticsChampionships
    ×