search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஞானதண்டாயுதபாணி"

    • கந்த சஷ்டி விழா வருகிற 13-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடக்கிறது.
    • 19-ந்தேதி மாலையில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம், பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி கோவிலில், கந்த சஷ்டி விழா வருகிற 13-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் காலை முதல் இரவு வரை, ஆறுகால பூஜைகள், சுவாமிக்கு அபிேஷக அலங்காரம் நடக்கிறது.

    இரவு 7 மணிக்கு மேல் இந்திர விமானம், ஆட்டுகிடா, வெள்ளையானை, நீலமயில் வாகனங்களில் சுவாமிகளின் திருவீதி உலா போன்றவை நடக்கிறது. இதைத்தொடர்ந்து 18-ந்தேதி மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹார விழா நடக்கிறது. 19-ந்தேதி மாலையில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

    ×