search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொந்தம்"

    • கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியை நாகை மாலி எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார்.
    • அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க பேரணி நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் முதல் மாநில மாநாடு மயிலாடுதுறையில் மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் தலைமையில் தொடங்கியது.

    முன்னதாக விஜயா திரையரங்கு அருகிலிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியை நாகை மாலி எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார்.

    அண்ணாசிலை, கிட்டப்பா அங்காடி, மணிக்கூண்டு, பட்டமங்கலத்தெரு தரங்கை சாலை வழியாக குடியிருப்போருக்கே அடிமனை சொந்தம், உழுபவருக்கே நிலம் சொந்தம் என்ற கோரிக்கைகள் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர்.

    பின்னர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

    மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் தலைமையில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம், நாகைமாலி எம்.எல்.ஏ., விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுப்ரமணியன், மாநில செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டில்லிபாபு, சங்கத்தின் மாநில அமைப்புக்குழுவின் நெ.இல.சீதரன் ஆகியோர் பேசினர்.

    இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்ட தலைவர் சிம்சன், அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் விஜய், மாவட்ட தலைவர் ராயர், மாவட்ட பொருளாளர் இயற்கை விவசாயி ராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×