search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்துதகராறு"

    • நடேசன் (வயது 40) இவருக்கு 4 தம்பிகள் உள்ளனர். இதில் இவருக்கும் இவரது கடைசி தம்பி பாக்கியராஜ் (29) என்பருக்கும் பாகப் பிரிவினை தொடர்பாக சிக்கல் இருந்து வந்தது.
    • இந்நிலையில் இன்று காலை நடேசனுக்கும், பாக்கியராஜிக்கும் இடையே சொத்தின் எல்லைகள் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் அடுத்த குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் (வயது 40) இவருக்கு 4 தம்பிகள் உள்ளனர். இதில் இவருக்கும் இவரது கடைசி தம்பி பாக்கியராஜ் (29) என்பருக்கும் பாகப் பிரிவினை தொடர்பாக சிக்கல் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை நடேசனுக்கும், பாக்கியராஜிக்கும் இடையே சொத்தின் எல்லைகள் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. இது சண்டையாக மாறியது. அப்போது நடேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாக்கியராஜ் மீது தாக்குதல் நடத்தினார். இதில் தலை மற்றும் கழுத்தில் பாக்கியராஜ் பலத்த காயமடைந்தார்.

    மேலும், கத்தி வெட்டை தடுக்க முயற்சித்த போது பாக்கியராஜின் இரண்டு விரல்கள் துண்டானது. இதில் பாக்கியராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் பாக்கியராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜகதீசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் தம்பி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகியுள்ள நடேசனை தேடி வருகின்றனர். மேலும், அவரது குடும்பத்தில் இருந்து ஒருவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் குன்னத்தூர் கிராமத்தில் அசம்பாவதிங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் அடுத்த குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் (வயது 40) இவருக்கு 4 தம்பிகள் உள்ளனர். இதில் இவருக்கும் இவரது கடைசி தம்பி பாக்கியராஜ் (29) என்பருக்கும் பாகப் பிரிவினை தொடர்பாக சிக்கல் இருந்து வந்தது.இந்நிலையில் இன்று காலை நடேசனுக்கும், பாக்கியராஜிக்கும் இடையே சொத்தின் எல்லைகள் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. இது சண்டையாக மாறியது. அப்போது நடேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாக்கியராஜ் மீது தாக்குதல் நடத்தினார். இதில் தலை மற்றும் கழுத்தில் பாக்கியராஜ் பலத்த காயமடைந்தார். மேலும், கத்தி வெட்டை தடுக்க முயற்சித்த போது பாக்கியராஜின் இரண்டு விரல்கள் துண்டானது. இதில் பாக்கியராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் பாக்கியராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜகதீசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் தம்பி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகியுள்ள நடேசனை தேடி வருகின்றனர். மேலும், அவரது குடும்பத்தில் இருந்து ஒருவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாதுகாப்பு பணியில் போலீசார்

    இச்சம்பவத்தால் குன்னத்தூர் கிராமத்தில் அசம்பாவதிங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×