search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கல்பட்டு தற்கொலை"

    • திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் பகுதியில் குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலை குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்ராஜ். இவரது மனைவி எல்லம்மாள் (வயது 23). இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த எல்லம்மாள் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×